Just In
- 42 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி இன்று இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனாவால் சமூக வலைத்தளம் வழியாக அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்த ஸ்கோடா யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவிக்கு ரூ.24.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய ஒரே வேரியண்ட்டாக விற்பனைக்கு கிடைக்கும். இதன் ரகத்திலேயே மிகவும் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 18 அங்குல அலாய் வீல்கள், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், டியூவல் டோன் பம்பர் இடம்பெற்றுள்ளன. பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சமாக இருக்கிறது.
உட்புறத்தில் எல்இடி ஆம்பியன் லைட் சிஸ்டம், 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம், ஸ்கோடா ஸ்மார்ட்லிங்க் கனெக்ட்டிவிட்டி வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பீஜ் வண்ண லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை 9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 202 கிமீ வேகம் வரை எட்டிப்பிடிக்கும் திறன் கொண்டது.
இந்த காரின் எஞ்சின் விசேஷ தொழில்நுட்ப அம்சத்தை பெற்றிருக்கிறது. பாரம் குறைவாக இருக்கும்போது இந்த நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினில் இரண்டு சிலிண்டர்கள் தானியங்கி முறையில் செயல்பாட்ட நிறுத்திக் கொண்டு, மீண்டும் இயங்கும் நுட்பத்தை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, அதிக எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும்.
இந்த காரில் 9 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இடம்பெறும்.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி லாவா புளூ, பிரில்லியண்ட் சில்வர், கேண்டி ஒயிட், மேக்னெட்டிக் பிரவுன், மேஜிக் பிளாக் மற்றும் குவார்ட்ஸ் க்ரே ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.
ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது ஜீப் காம்பஸ் மற்றும் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி ராக், விரைவில் வரும் ஹூண்டாய் டூஸான் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ரூ.50,000 முன்பணத்துடன் இந்த எஸ்யூவிக்கு ஏற்கனவே முன்பதிவு நடந்து வருகிறது. விரைவில் டெலிவிரிப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதுடன், டாப் வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அதிக விலை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்கோடா தள்ளப்பட்டு விட்டது. இதனால், இந்தியர்கள் மத்தியில் சற்றே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி