Just In
- 38 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 4 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
முற்றிலும் வேறுபட்ட புதிய ஸ்கோடா ரேபிட் கார்... அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்
முற்றிலும் வேறுபட்ட டிசைனில் வரும் புதிய ஸ்கோடா ரேபிட் கார் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவில் ஸ்கோடா ரேபிட் காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. அருமையான டிசைன், தரமான கட்டுமானம், சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் இந்த கார் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றிருக்கிறது. எனினும், ஸ்கோடாவின் விற்பனைக்கு பிந்தைய சேவை தரம் சொதப்பி வந்த நிலையில், தற்போது அந்த பிரச்னைகள் களையப்பட்டு வாடிக்கையாளர்கள் மெச்சத் தக்க வகையில் மாறி வருகிறது.
மேலும், அண்மையில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா ரேபிட் கார் மிக சவாலான விலையில் சந்தைக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சூழலில், மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி, புதிய ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் போன்ற ஜாம்பவான் மாடல்களுடன் கடுமையான சந்தைப் போட்டியை ஸ்கோடா ரேபிட் கார் எதிர்கொண்டு வருகிறது. இந்த சந்தைப் போட்டியை லாவகமாக எதிர்கொள்ளும் வகையில், முற்றிலும் புதிய தலைமுறை அம்ங்களுடன் ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் வெளியிடப்பட்ட ஸ்கோடா ரேபிட் காரின் புதிய தலைமுறை மாடல் வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக மாறி இருக்கிறது. இதனால், இந்த கார் இந்தியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இது நிச்சயம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் அறிமுகம் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் ட்விட்டரில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அந்த கேள்வி பதில் டீம் பிஎச்பி தளத்தின் மூலமாக வெளியாகி இருக்கிறது.
அதில், வெளிநாடுகளில் அறிமுகமாகும் புதிய மிட்சைஸ் செடான் கார் நேரடியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படாது. இந்தியாவுக்கான பல பிரத்யேக அம்சங்களுடன் கொண்டதாக புதிய மிட்சைஸ் செடான் காரை அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளோம்," என்று பதில் தெரிவித்துள்ளார். இதனால், அடுத்த ஆண்டு இறுதியில் ஸ்கோடா ரேபிட் காருக்கு மாற்றாக புதிய மிட்சைஸ் செடான் கார் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் என்பதுடன், பெரும்பாலான உதிரிபாகங்கள் இந்திய சப்ளையர்களிடம் இருந்து பெறுவதற்கும் ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதனால், விலையை மிக சவாலாக நிர்ணயிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது பிஎஸ்6 ரேபிட் காரில் இடம்பெற்றிருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் புதிய தலைமுறை ஸ்கோடா மிட்சைஸ் செடான் காரிலும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் 110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.
அருமையான டிசைன், சிறந்த கட்டுமானத் தரம், போதுமான வசதிகளுடன் இந்தியர்களை வெகுவாக கவரும் வகையில் இந்த புதிய மிட்சைஸ் செடான் காரை கொண்டு வருவதற்கு ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த கார் நிச்சயம் இந்தியர்களை கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!