Just In
- 56 min ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Finance பெங்களூரு டிராபிக்: மலைப்போல நம்பப்படும் புதிய சேவை.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல் தான்..!!
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாடிக்கையாளர், ஓட்டுனர் பாதுகாப்பிற்காக ரூ.500 கோடியை ஒதுக்கிய ஓலா டாக்சி!
ஒவ்வொரு பயணத்தையும் பாதுகாப்பாக மாற்றும் வகையில், கொரோனா தடுப்பு நடைமுறைகளுடன் கார்களை இயக்குவதற்காக ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறது ஓலா டாக்சி நிறுவனம்.
வாடகை கார் மார்க்கெட்டில் ஓலா டாக்சி நிறுவனம் முதன்மை வகிக்கிறது. பெருநகரங்களின் போக்குவரத்து சேவையிலும் ஓலா டாக்சி தவிர்க்க முடியாத அங்கமாகி உள்ளது. இந்த நிலையில், கொரோனா பிரச்னை காரணமாக, நிறுத்தப்பட்டு இருந்த டாக்சி சேவையை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ள 200 நகரங்களில் மீண்டும் டாக்சி சேவையை துவங்கி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஓலா டாக்சி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அதன்படி, வாடிக்கையாளர்களும், ஓட்டுனர்களும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தப்பட உள்ளது. ரைடு சேஃப் இந்தியா என்ற பெயரிலான இந்த திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.
இதற்காக, கார்களை 48 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநீக்கம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் 500 கிருமி நீக்க மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. அனைத்து கார்களும் இந்த மையங்களின் வாயிலாக சுத்தப்படுத்தப்படும்.
காரின் கைப்பிடி, இருக்கைகள் உள்ளிட்ட இடங்களிலும் ரசாயனம் மூலமாக கிருமி நீக்க நடைமுறைகள் பின்பற்றப்படும். அதேபோன்று, ஓலா டாக்சி ஓட்டுனர்களுக்கும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளித்து, அதற்கு சான்றும் வழங்கி சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டுனர்களுக்கு தினசரி உடல்வெப்ப அளவு சோதிக்கும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவதற்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதோடு, புதிய மொபைல்போன் செயலியையும் ஓலா அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டை ஓலா செய்ய இருக்கிறது.
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!