Just In
- 15 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 7 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 7 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- News பாஜக கூட்டணியில் பாமகவிற்கு எத்தனை தொகுதிகள்? சற்று நேரத்தில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Finance வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
விலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா..?
இந்திய விளையாட்டு வீராங்கனை துத்தி சந்த் தனது விலையுயர்ந்த சொகுசு காரை விற்பனைச் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தைக் கீழே காணலாம்.
உலகையே அச்சுறுத்தி வரும் ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா ஒட்டுமொத்த மனித இனத்தின் வாழ்க்கையுமே தலை கீழாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த வைரசால் ஏற்பட்ட மற்றும் ஏற்பட்டு வரும் இழப்புகள் ஏராளம். குறிப்பாக, இந்த வைரஸ் மனிதர்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நிதிநிலையையும் கடுமையாக பாதிப்படையச் செய்து வருகின்றது.
இதனால் தினக் கூலி தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதரமும் கேள்விக் குறியாகியுள்ளது. இந்த நிலை ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி ஒரு சில நடுத்தர வர்த்தகத்தினருக்கும் உருவாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில், தன்னுடைய விலையுயர்ந்த காரை விற்பனைச் செய்யும் சூழ்நிலை இந்திய தடகள வீராங்கனை ஒருவருக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சூப்பர் கார் பந்தய பெண் வீராங்கனை ஒருவருக்கும் இதேபோன்ற நிலைதான் ஏற்பட்டது. கொரோனாவால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலை காரணமாக இவரது வாழ்க்கப் பாதையே முற்றிலுமாக மாறியது. அதாவது, கொரோனாவால் உருவான நிதிநிலையைப் போக்குவதற்கு அவருடைய கேரியரையே மாற்றிக் கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். இதற்காக அவர் தேர்வு செய்த வழி 18 பிளஸ் (ஆபாச படம்) திரைப்படங்கள் ஆகும்.
இவ்வாறு பலரின் வாழ்க்கையில் இந்த கொரோனா அதிரடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில்தான் இந்திய தடகள விளையாட்டு வீராங்கனையான துத்தி சந்த் என்பவருக்கும் கொரோனா வைரஸ் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால், இவர் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தன்னிடம் இருக்கும் விலையுயர்ந்த காரை விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தற்போது காட்டுத் தீயைவிட பல மடங்கு வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இதனால், புது முக வாகனங்களின் அறிமுகம் மட்டுமின்றி வாகனங்கள் சார்ந்த நடைபெறும் அனைத்து செயல்களுக்குமே தடை ஏற்பட்டுள்ளது. அதாவது, பந்தயம், கண்காட்சி உள்ளிட்ட அனைத்துச் செயல்பாட்டுக்குமே தற்காலிக தடை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், இதைச் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்த நபர்களின் வாழ்வாதரமும் கேள்விக் குறியாக மாறியிருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், ஸ்பான்சர்ஸ் செய்வதற்கு நிறுவனங்கள் முன் வராத காரணத்தால் பல வீரர்களின் நிலை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக் காட்டே ஆஸ்திரேலியா ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுநர் ரெனீ கிரேசி (ஆபாச திரைப்பட நடிகையாக மாறியவர்) மற்றும் இந்திய தடகள வீராங்கனை துத்தி சந்த்.
துத்தி சந்த் தற்போது தனது 3 செரீஸ் பிஎம்டபிள்யூ செடான் ரக காரை விற்பனைச் செய்ய முடிவு செய்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தன்னுடைய பயிற்சிக்காகவும், தனக்கு பயிற்சியளிப்பவர்களுக்கு ஊதியம் வழங்கவும் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "இந்த காரை 30 லட்சங்கள் கொடுத்து வாங்கினேன். இதனை பராமரிப்பது தற்போது கேள்விக் குறியாக மாறியுள்ளது. கூடுதலாக இதனை பார்க் செய்யக்கூட என்னிடம் பாதுகாப்பான இடம் இல்லை. என்னிடம் ஏற்கனவே இரு கார்கள் இருக்கின்றன. எனவே, இதை வைத்திருப்பது சற்று சிரமமாக மாறியிருக்கின்றது. ஆகையால் தான் இதை விற்க முடிவெடுத்துள்ளேன்" என்றார்.
இதனை தி ஹிந்து ஆங்கில தளத்திற்கு அண்மையில் அளித்த போட்டியின்போது தடகள விளையாட்டு வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னுடைய டயட்டிற்காக ஒரு மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை எனக்கு செலவாகின்றது. இதில், என்னுடைய டயட் மற்றும் உடல் நலத்தைக் காக்கும் பயிற்சியாளரின் ஊதியமும் அடங்கும். எனவே, தற்போது எனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து என்னால் சமாளிக்க முடியவில்லை. ஆகையால், காரை விற்க இதுவும் ஓர் காரணம்" என தெரிவித்தார்.
துத்தி சந்த் இந்தியாவிற்காக பல போட்டிகளில் கலந்துக் கொண்டு பதக்கங்களை வென்றவர் ஆவார். இவர் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்று தந்தார். தற்போது டோக்யோ ஒலிம்பிற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஆனால், கொரோனாவால் பல ஸ்பான்சர்கள் தங்களின் நிதியுதவியை நிறுத்தியுள்ளனர். இதனால் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் துத்தி சந்த் தனது தெலங்கானா பதிவு கொண்ட பிஎம்டபிள்யூ காரை கணிசமான தொகைக்கு விற்பனைச் செய்து பயிற்சியைத் தொடர இருக்கின்றார். அதாவது, தனது ஒலிம்பிக் கனவை நிறைவேற்ற சொகுசு காரையே விற்கும் நிலைக்கு துத்தி சந்த் வந்துள்ளார்.
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!
-
நிறைய பேரு இப்பவே காண்டாக ஆரம்பிச்சுட்டாங்க.. ஹோண்டா இப்படி ஒரு வேலையை செய்ய போகுதா!! எப்படிதான் மனசு வருதோ!