Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 3 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Movies Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விலையுயர்ந்த பைக்கையும் இழந்து, ரூ.23,000 அபராதமும் செலுத்தும் இளைஞர்.. எதற்காக தெரியுமா..?
ராயல் என்பீல்டை போலீஸாரிடம் இழுந்ததது மட்டுமில்லாமல் ரூ. 23 ஆயிரத்தையும் அபரதாமாக இளைஞர் ஒருவர் கட்டவிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் கடந்த வருடம் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் முன்பெப்போதும் அளவில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 என்ற அபராதத் தொகை, புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ. 1,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று ஒவ்வொரு விதமீறல்களுக்குமான அபராதத் தொகை பத்து மடங்கு வரை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டை விபத்தில்லா நாடாகவும், விதிமீறல்கள் இல்லாத நாடாக மாற்றும் நோக்கிலும் மத்திய அரசு இந்த புதிய விதிகளை கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
இருப்பினும், வாகன ஓட்டிகள் துளியளவும் இந்த போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதே இல்லை. தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.
ஆகையால், போலீஸாரும் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்மீது எந்தவொரு பாராபட்முமின்றி அதிகபட்ச அபராதத்தை விதித்து வருகின்றனர்.
அந்தவகையில், விதிமீறலில் ஈடுபட்ட ஓர் இளைஞரின் ராயல் என்பீல்டைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, அவரின் தவறை உணர்த்தும் வகையில் ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதச் செல்லாணையும் வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியிருக்கின்றது. போலீஸார் இந்த கடுமையான நடவடிக்கையால், பைக்கின் உரிமையாளர் கடும் விரக்தியில் உரைந்திருக்கின்றார்.
ராயல் என்பீல்டு பைக்கில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சரைப் (அதிக சத்தத்தை வெளிப்படுத்தும்) பயன்படுத்திய குற்றத்திற்காகவே ஹரியானா போலீஸார் இத்தகைய கடும் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதற்கு முன்பாக இதேபோன்ற பல்வேறு நடவடிக்கை ஆஃப்டர் மார்க்கெட் உபகரணங்களுக்கு எதிராக போலீஸார் மேற்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பாக, இதுபோன்ற அதிக ஒலியை எழுப்பும் சைலென்சர்களை பறிமுதல் செய்வதற்காக தனிப்பட்ட தேடுதல் வேட்டையை ஒரு சில மாநில போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஹரியானாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை வழக்கமான வாகன தணிக்கையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாகன தணிக்கையின்போது வந்த ராயல் என்பீல்டில் ஏதே ஓர் வித்தியாசம் இருப்பதை உணர்ந்த போலீஸார். அதனை கடுமையான ஆய்விற்கு உட்படுத்தினர்.
அப்போது, சைலென்சரில் இருந்து வந்த காதுகளையே கிழிக்க அளவிற்கு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, பைக்கின் ஆவணத்தைக் காண்பிக்குமாறு போலீஸார் கேட்டுள்ளனர். ஆனால், அவர்களிடத்தில் ஆவணம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆகையால், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சரைப் பயன்படுத்தியக் குற்றத்திற்காக ரூ. 23 ஆயிரம் ரொக்கமும், ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பைக்கைப் பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்தனர். பின்னர், முறையான ஆவணங்களைக் காண்பித்த பின்னர் பைக்கை எடுத்துச் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, அபரதாத் தொகையும் கணிசமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகை புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழே போலீஸார் வழங்கியுள்ளனர்.
இதுபோன்று உச்சபட்ச அபராதத்தைப் போலீஸார் வழங்குவது முதல் முறையல்ல. அதேசமயம், இந்த உச்சபட்ச அபராதத்தை காண்பித்து ஒரு சில போலீஸார் கையூட்டு பெற்று மக்களை அதிர வைத்து வருகின்றனர்.
பொதுசாலையில் இதுபோன்று ஆஃப்டர் மார்க்கெட் உபகரணங்களைப் பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். அவை, எண்ணற்ற பின் விளைவுகளை ஏற்படுத்துபவை ஆகும். இதனாலேயேப் போலீஸார் சந்தைக்கு பிறகான கருவிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Image Courtesy: SirsaPost/YouTube