Just In
- 1 hr ago சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
- 1 hr ago முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
- 1 hr ago பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
- 4 hrs ago மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
Don't Miss!
- Finance டாப்ல இருக்கு TCS.. லிங்க்ட்இன் வெளியிட்ட லிஸ்ட்..!
- Sports GT vs DC : கண்ணை மூடி திறப்பதற்குள் காலி.. 4 விக்கெட்டை பறிகொடுத்த குஜராத்.. இஷாந்த் சர்மா சம்பவம்!
- News ஐசியூவில் நடிகர் மன்சூர் அலிகான்.. சென்னை மருத்துவமனையில் சிகிச்சை.. உடல்நல கோளாறுக்கு என்ன காரணம்?
- Lifestyle வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. ரொம்பவும் ஈஸியா கேக் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விலையுயர்ந்த பைக்கையும் இழந்து, ரூ.23,000 அபராதமும் செலுத்தும் இளைஞர்.. எதற்காக தெரியுமா..?
ராயல் என்பீல்டை போலீஸாரிடம் இழுந்ததது மட்டுமில்லாமல் ரூ. 23 ஆயிரத்தையும் அபரதாமாக இளைஞர் ஒருவர் கட்டவிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் கடந்த வருடம் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் முன்பெப்போதும் அளவில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 என்ற அபராதத் தொகை, புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ. 1,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று ஒவ்வொரு விதமீறல்களுக்குமான அபராதத் தொகை பத்து மடங்கு வரை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டை விபத்தில்லா நாடாகவும், விதிமீறல்கள் இல்லாத நாடாக மாற்றும் நோக்கிலும் மத்திய அரசு இந்த புதிய விதிகளை கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
இருப்பினும், வாகன ஓட்டிகள் துளியளவும் இந்த போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதே இல்லை. தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.
ஆகையால், போலீஸாரும் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்மீது எந்தவொரு பாராபட்முமின்றி அதிகபட்ச அபராதத்தை விதித்து வருகின்றனர்.
அந்தவகையில், விதிமீறலில் ஈடுபட்ட ஓர் இளைஞரின் ராயல் என்பீல்டைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, அவரின் தவறை உணர்த்தும் வகையில் ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதச் செல்லாணையும் வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியிருக்கின்றது. போலீஸார் இந்த கடுமையான நடவடிக்கையால், பைக்கின் உரிமையாளர் கடும் விரக்தியில் உரைந்திருக்கின்றார்.
ராயல் என்பீல்டு பைக்கில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சரைப் (அதிக சத்தத்தை வெளிப்படுத்தும்) பயன்படுத்திய குற்றத்திற்காகவே ஹரியானா போலீஸார் இத்தகைய கடும் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதற்கு முன்பாக இதேபோன்ற பல்வேறு நடவடிக்கை ஆஃப்டர் மார்க்கெட் உபகரணங்களுக்கு எதிராக போலீஸார் மேற்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பாக, இதுபோன்ற அதிக ஒலியை எழுப்பும் சைலென்சர்களை பறிமுதல் செய்வதற்காக தனிப்பட்ட தேடுதல் வேட்டையை ஒரு சில மாநில போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஹரியானாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை வழக்கமான வாகன தணிக்கையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாகன தணிக்கையின்போது வந்த ராயல் என்பீல்டில் ஏதே ஓர் வித்தியாசம் இருப்பதை உணர்ந்த போலீஸார். அதனை கடுமையான ஆய்விற்கு உட்படுத்தினர்.
அப்போது, சைலென்சரில் இருந்து வந்த காதுகளையே கிழிக்க அளவிற்கு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, பைக்கின் ஆவணத்தைக் காண்பிக்குமாறு போலீஸார் கேட்டுள்ளனர். ஆனால், அவர்களிடத்தில் ஆவணம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆகையால், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சரைப் பயன்படுத்தியக் குற்றத்திற்காக ரூ. 23 ஆயிரம் ரொக்கமும், ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பைக்கைப் பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்தனர். பின்னர், முறையான ஆவணங்களைக் காண்பித்த பின்னர் பைக்கை எடுத்துச் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, அபரதாத் தொகையும் கணிசமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகை புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழே போலீஸார் வழங்கியுள்ளனர்.
இதுபோன்று உச்சபட்ச அபராதத்தைப் போலீஸார் வழங்குவது முதல் முறையல்ல. அதேசமயம், இந்த உச்சபட்ச அபராதத்தை காண்பித்து ஒரு சில போலீஸார் கையூட்டு பெற்று மக்களை அதிர வைத்து வருகின்றனர்.
பொதுசாலையில் இதுபோன்று ஆஃப்டர் மார்க்கெட் உபகரணங்களைப் பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். அவை, எண்ணற்ற பின் விளைவுகளை ஏற்படுத்துபவை ஆகும். இதனாலேயேப் போலீஸார் சந்தைக்கு பிறகான கருவிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Image Courtesy: SirsaPost/YouTube
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!
-
இவங்க நினைச்சி இருந்தா விலையுயர்ந்த காரை கூட வாங்கி இருக்கலாம்!! மலிவான எலக்ட்ரிக் காருடன் டிவி சீரியல் நடிகை!
-
நம்ப முடியாத அளவிற்கு விலையை குறைத்த ஓலா.. சைக்கிள் வாங்குறதபோல எல்லாரும் இந்த இ-ஸ்கூட்டர வாங்க போறாங்க!