Just In
- 9 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான புதிய அறிமுக கார்கள் இவைதான்..!
ஸ்கோடா நிறுவனம் இந்த 2020ஆம் ஆண்டில் ஐந்து புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த திட்டுமிட்டிருக்கிறது. ஸ்கோடா நிறுவனம் 2.0 கார்ப்ரேட் வியூகத்தின் ஒரு பகுதியாக சில புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ், சர்வீஸ் & மார்க்கெட்டிங் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் முன்னதாக கூறியிருந்தார்.
இந்நிறுவனம் இந்த புதிய வருடத்தில் அறிமுகப்படுத்தவுள்ள அந்த ஐந்து மாடல்களை பற்றி இந்த செய்தியில் இனி காண்போம்.
இந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது அடுத்த தயாரிப்பு மாடலான விஷன் இன் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. முன்னதாக எம்க்யூபி ஏ0 இன் எஸ்யூவி என பெயரிடப்பட்டிருந்த இந்த காருக்கு பிறகு விஷன் இன் என பெயர் மாற்றப்பட்டது.
இரண்டாவது அறிமுக மாடலாக கரோக் எஸ்யூவியையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் காம்பஸ் மாடலுடன் போட்டியிடுவதற்காக பிரேத்யகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த எஸ்யூவி மாடல் சிபியூ முறையில் இந்திய சந்தையில் களமிறங்கவுள்ளது.
கரோக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 146 பிஎச்பி பவரை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் காருக்கு வழங்குகிறது. இந்த காரின் அறிமுகம் வரும் ஏப்ரல் மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
2020ல் ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள மூன்றாவது கார் ராபிட் ஃபேஸ்லிஃப்ட் ஆகும். முந்தைய ராபிட் மாடலில் இருந்து மிகவும் நுட்பமான மாற்றங்களை ஏற்றுள்ள இந்த காரில் இந்நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் இரு விதமான ஆற்றல்களை வெளிப்படுத்துகிறது. ஒன்று 94 பிஎச்பி/ 175 என்எம் டார்க், மற்றொன்று 113 பிஎச்பி/ 200 என்எம் டார்க் என்பவையாகும். ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன.
ஸ்கோடாவில் இருந்து இந்த ஆண்டு அறிமுகமாகவுள்ள நான்காவது கார் சூப்பர்ப் எக்ஸிக்யூட் செடான். இந்த செடான் மாடலின் அறிமுகம் 2020ன் பிற்பகுதியில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த 2020 சூப்பர்ப் மாடல் மூன்று என்ஜின் தேர்வுகளுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மூன்று என்ஜின் தேர்வுகளாவன, 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வு, 1.4 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் மற்றும் பெட்ரோல் என்ஜினுடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்ட மில்ட்-ஹைப்ரீட் அமைப்பு ஆகும்.
இந்த புதிய ஆண்டில் ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள மாடல்களில் நாம் கடைசியாக பார்க்கப்போவது ஆக்டேவியா ஆர்எஸ் 245. ஆக்டேவியாவின் முந்தைய மாடல் அறிமுகமான ஒரு வாரத்திற்குள்ளாகவே அனைத்து கார்களும் விற்பனை செய்யப்பட்டுவிட்டது என்றால் ஆக்டேவியா மாடல்களுக்கு இந்திய சந்தையில் இருக்கும் வரவேற்பை பாருங்கள்.
ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடலில் 2.0 லிட்டர் டர்போ-சார்ஜ்டு டிஎஸ்ஐ நான்கு சிலிண்டர் அமைப்பை கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலின் அதிகப்பட்ச அளவு 245 பிஎச்பி ஆகும். ஸ்கோடா நிறுவனத்தின் லைன்-அப் மாடல் கார்களில் இந்த ஆக்டேவியா மாடல் தான் வேகமான மற்றும் விலையுயர்ந்த காராகும்.
ஸ்கோடா நிறுவனம் மட்டுமில்லாமல் வேறு சில நிறுவனங்களும் டெல்லியில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டிற்கும் மேற்பட்ட புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றன. இந்த வகையில் எம்ஜி மோட்டார் நிறுவனமும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் நான்கு புதிய எஸ்யூவிகளை வெளியிடவுள்ளதாக ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்தோம்.
இவ்வாறு முன்னணி நிறுவனங்களும் அடுத்தடுத்த கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது கார் பிரியர்களிடையே மிகுந்த ஆச்சிரியத்தை உண்டாக்கியுள்ளது. ஸ்கோடா, எம்ஜி நிறுவனங்களை போல் எந்தெந்த நிறுவனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அதிகளவில் தயாரிப்பு மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளன என்பது இனி வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா