Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Movies தமன்னா அதற்கு செட் ஆகமாட்டார்.. ஓபனாக பேசிய இயக்குநர் லிங்குசாமி
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கரோக் எஸ்யூவி விலையை குறைக்க அதிரடி திட்டத்தை கையில் எடுத்த ஸ்கோடா!
கரோக் எஸ்யூவி விலையை அதிரடியாக குறைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் சிறப்பான வர்த்தகத்தை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. இதற்காக புராஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக, எஸ்யூவி கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் கரோக் என்ற அட்டகாசமான மிட்சைஸ் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. டிசைன், எஞ்சின், வசதிகள், பாதுகாப்பு அம்சங்களில் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், விலை ரூ.24.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், அதிகபட்ச வசதிகள் கொண்ட ஒரே வேரியண்ட்டாகவும் களமிறக்கப்பட்டது.
ஸ்கோடா கரோக் அடிப்படையில, அதே எஞ்சின் உள்ளிட்டவற்றுடன் வந்துள்ள ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஸ்கோடா கரோக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டி ராக் ஆகிய இரண்டு மாடல்களுமே இந்தியாவில் இறக்குமதி செய்தே விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், சற்றே கூடுதல் சிறப்பம்சங்கள், வடிவமைப்பில் மாற்றங்கள் கொண்ட ஸ்கோடா கரோக் எஸ்யூவிக்கு ரூ.5 லட்சம் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எனினும், ஸ்கோடா கரோக் ஸ்டைலும், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உள்ளதால், விலை பொருட்டாக எடுக்காமல் வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டிய சிறு நிர்பந்தம் உள்ளது.
இந்த நிலையில், ஸ்கோடா கரோக் விலை போட்டியாளர்களைவிட சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறித்த எழுந்த விமர்சனங்களை அடுத்து, விலை குறைப்பது குறித்த திட்டங்களை ஸ்கோடா ஆட்டோ கையில் எடுத்துள்ளது.
இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ்,"கரோக் எஸ்யூவியை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கான திட்டம் உள்ளது. நீண்ட கால அடிப்படையில் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்து விற்பது சரியாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கரோக் எஸ்யூவிக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இருந்தால், அதனை நிச்சயம் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வற்கான திட்டத்தை கையில் எடுக்க ஸ்கோடா ஆர்வமாக உள்ளது. எனினும், கரோக் எஸ்யூவியின் விற்பனையை பொறுத்தே இது அமையும். உள்நாட்டு உற்பத்தி துவங்கினால், விலை கணிசமாக குறைய வாய்ப்பு ஏற்படும்.
ஸ்கோடா கரோக் எஸ்யூவியானது இந்தியாவில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.