Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கியா செல்டோஸ் போட்டியாக வரும் அசத்தலான புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி!
கியா செல்டோஸ் காருக்கு நேரடி போட்டியை தரும் வகையில் புதிய எஸ்யூவி மாடலை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியின் சில முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு ஆவலுடன் புதிய கார் மாடல்களை களமிறக்க உள்ளது.
புராஜெக்ட் 2.0 என்ற பெயரிலான இந்த திட்டத்தின் கீழ் புதிய எஸ்யூவி மாடல்களை வரிசை கட்ட ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக இந்தியாவில் புதிய மாடல்களை உருவாக்கும் பொருட்டு பல ஆயிரம் கோடி ரூபாயை ஃபோக்ஸ்வேகன் குழுமம் முதலீடு செய்ய உள்ளது.
இந்த எஸ்யூவி மாடல்களை இந்தியாவுக்கான சிறப்பம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் உருவாக்குவதற்கும் முடிவு செய்துள்ளது. அதாவது, வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடல்களிலிருந்து வேறுபாடுகளுடன் இந்த எஸ்யூவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.
இதில், ஒரு புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவியும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகின. தற்போது அந்த எஸ்யூவி இந்தியாவில் காஸ்மிக் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இந்த புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி மாடலானது ஸ்கோடா விஷன் கான்செப்ட் அடிப்படையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி ஏo ஐஎன் என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட இருக்கிறது.
ஸ்கோடா காஸ்மிக் எஸ்யவியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் டிடிஐ டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக செயல்திறன் மற்றும் குறைவான மாசு உமிழ்வுடன் இந்த எஞ்சின்கள் வர இருக்கின்றன.
புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஃப்ளோட்டிங் வகை தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. ஆப்பில் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.
இந்த காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோ்ல, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.
ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவியின் பல முக்கிய பாகங்களை இந்த எஸ்யூவி பகிர்ந்து கொண்டிருக்கும். இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு இந்த புதிய ஸ்கோடா காஸ்மிக் எஸ்யூவி போட்டியாக அமையும்.