Just In
- 33 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 53 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குஜராத் சுஸுகி கார் ஆலையின் மில்லியன் சாதனை!
குஜராத்தில் அமைந்துள்ள சுஸுகி கார் ஆலை உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது. சுஸுகி கார் நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலையின் உற்பத்தி சாதனை குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் குஜராத் மாநிலம், ஆமதாபாத் அருகே புதிய கார் ஆலையை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த கார் ஆலை சுஸுகி நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
அதாவது, ஒப்பந்த அடிப்படையில் இந்த ஆலையில் மாருதி சுஸுகி கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கார் ஆலையில் கார் உற்பத்தி துவங்கப்பட்டது.
இந்த நிலையில், உற்பத்தி துவங்கப்பட்டு மூன்றரை ஆண்டு காலத்தில் ஒரு மில்லியன் கார்களை உற்பத்தி செய்து இந்த கார் ஆலை புதிய சாதனை படைத்துள்ளது. ஒரு மில்லியன் காராக மாருதி பலேனோ கார் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ஆலையில் முதலாவதாக மாருதி பலேனோ கார் உற்பத்தி துவங்கியது. இதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு மாருதி ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி துவ்கி நடந்து வருகிறது. ஏற்கனவே ஸ்விஃப்ட் கார் மாருதியின் மானேசர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆலையில் இருந்து வெளிநாடுகளுக்கும் கார் ஏற்றுமதி செய்யும் பணிகளும் துவங்கின. கடந்த 2018-19 நிதி ஆண்டில் மட்டும் 4,10,000 கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மாருதி பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனை தேவைகளை இந்த ஆலையின் மூலமாக மாருதி சுஸுகி மற்றும் சுஸுகி நிறுவனங்கள் கச்சிதமாக பூர்த்தி செய்து வருகின்றன. மேலும், ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் மானேசர் ஆலைகளின் உற்பத்தி நெருக்கடியை இந்த ஆலை வெகுவாக குறைத்துள்ளது.
இந்த கார் ஆலையில் 1,800 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனாவால் பிரச்னைகள் இருந்தாலும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கார் உற்பத்தி பணிகளை தொடர்ந்து நடக்கின்றன.
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!