Just In
- 10 min ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 42 min ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 5 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 5 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
Don't Miss!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவின் முதல் சூரிய-சக்தி ஆட்டோ... தமிழகத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து மாஸ் காட்டிய முதல்வர்!
இந்தியாவின் முதல் சூரிய சக்தி மூலம் இயங்கும் ஆட்டோ நம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
உலகம் முழுவதும் தற்சமயம் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பற்றி நான் கூற வேண்டிய அவசியமில்லை. கொரோனா வைரஸினால் பல உயிர்கள் பலியாகி கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் தான் சில உயிர்களையாவது காப்பாற்ற முடியும் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது.
ஆனால் இந்தியாவில் நகர்புறங்களில் உள்ள சில குறுகிய சாலைகளில் ஆம்புலன்ஸ் செல்வது இப்போதும் இயலாத காரியமாகவே உள்ளது. இதனை மனதில் வைத்துதான் தமிழ்நாட்டை சேர்ந்த எம் ஆட்டோ க்ரூப் என்ற நிறுவனம் சூரிய ஆற்றலில் இயங்கக்கூடிய 13 விதமான எலக்ட்ரிக் ஆட்டோகளை அறிமுகம் செய்துள்ளது.
ஆம்புலன்ஸிற்கு இணையான மருத்துவ வசதிகளை நிரப்பும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள இவை, ஆம்புலன்ஸால் செல்ல இயலாத சாலைகளிலும் எளிதாக இயங்கும். இவ்வாறான எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தமிழக அரசு எப்போதுமே முக்கியத்துவம் அளிக்கும்.
இந்த வகையில் தான் இன்று (செப்டம்பர் 22) தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து இந்த சூரிய சக்தி ஆட்டோக்களை பச்சை கொடி அசைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் நவீன தொழிற்நுட்பங்கள் நிறைந்த முதலீடுகளை ஈர்த்திட, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் கடந்த ஆண்டு அரசு முறை பயணம் மேற்கொண்டு 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, சுமார் 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
இப்பயணத்தின்போது, துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது, எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம், 140 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களிலான புதிய ஆட்டோக்களை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய ஆட்டோக்களை முதல்வர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஆட்டோக்களில், சிசிடிவி கேமிரா, ஜிபிஎஸ் வசதி, ஆபத்து பொத்தான், டாப் (TAB) போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எம் எலக்ட்ரிக் ஆட்டோக்களின் ஓட்டுநர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், தனியார் குழுமத்தின் தலைவர் மன்சூர் அலிகான், நிர்வாக இயக்குநர் யாஸ்மின் ஜவஹர் அலி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம் ஆட்டோ க்ரூப்பின் சேர்மன் மன்சூர் அலிகான் பிரபல செய்திதளத்திற்கு அளித்த பேட்டியில், நெடுஞ்சாலைக்கு 2கிமீ தூரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையை கொண்ட நகரத்தை சேர்ந்தவன் நான். பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்மென்றால் குறைந்தது 2கிமீ தூரமாவது நடக்க வேண்டும். எனது தந்தை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததினால் உயிர் இழந்தார். ஆனால் அத்தகைய பகுதிகளை இந்த எம்-ஆம்புலன்ஸ் எளிதாக சென்றடையும் என கூறினார்.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?