Just In
- 24 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 43 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்... 6 மாதங்களுக்கு இஎம்ஐ பயமும் வேண்டாம்... டாடா அதிரடி!
கொரோனா காலத்தில் விட்டதை குறுகிய காலத்தில் பிடிக்க வேண்டும் என்பதற்காக டாடா நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல்ஸ்துறை அதன் வரலாற்றிலேயே இல்லாத வகையிலான விற்பனை வீழ்ச்சியை தற்போது சந்தித்து வருகின்றது. வாகனத்துறையின் இந்த இக்கட்டான நிலைக்கு கொரோனா வைரஸ் மட்டுமே காரணமாக அமைந்துள்ளது. இதனால் நீடித்து வரும் இழப்புகள் ஏராளாம்.
எனவேதான், இந்த வைரசை ஒழித்து கட்டுவதற்கான பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், வைரசால் ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுக்கம் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வரகின்றன. அந்தவகையில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் கடந்த காலங்களில் இழந்தவற்றை மிகக் குறுகிய காலத்தில் பெற வேண்டும் என்பதில் அதி தீவிரம் காட்டி வருகின்றது.
அம்மாதிரியான ஓர் செயலில்தான் இந்திய ஆட்டோ மொபைல்துறையின் மிகப் பெரிய ஜாம்பவான் நிறவனம் என்று போற்றப்படும் டாடா களமிறங்கியிருக்கின்றது.
இதனடிப்படையில், வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை அது அறிவித்துள்ளது.
பூஜ்ஜியம் டவுண்பேமென்ட், ஆறு மாதங்களுக்கு இஎம்ஐ விலக்கு உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை அது அறிவித்துள்ளது. ஆனால், இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் டாடாவின் குறிப்பிட்ட சில மாடல்களை மட்டுமே வாங்க முடியும். டியாகோ, நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய மாடல்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
இந்த மூன்று மாடல்களும் அதிக பாதுகாப்பு நிறைந்த கார்கள் ஆகும். இவை, பாதுகாப்பு ரேட்டிங்கில் நான்கு நட்சத்திரங்களுக்கு குறைவில்லாமல் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. அதிலும், டாடா நெக்ஸான் இந்தியாவின் முதல் அதிக பாதுகாப்பு நிறைந்த கார் என்ற பெருமையைப் பெற்ற மாடல் ஆகும். இந்த சிறப்பு வாய்ந்த கார்களுக்குதான் டாடா நிறுவனம் சிறப்பு கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஒரு ரூபாய் கூட முன் பணம் இல்லாமலும், ஆறு மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டும் என்ற அச்சம் இல்லாமலும் கார்களை வாங்கும் திட்டம்தான் அது.
எனவே, டாடாவின் நெக்ஸான், டியாகோ மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களை வாங்கிய பின்னர் ஆறு மாதங்கள் கழித்தே இஎம்ஐ கட்ட வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
அதேசமயம், இந்த இடைவெளிக்கான (ஆறு மாதங்கள்) வட்டி தொகையை மட்டும் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதை எப்போது செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், பூஜ்ஜியம் டவுண்பேமென்ட் மற்றும் ஆறு மாத இஎம்ஐ விளக்கு மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.
இது எந்தளவிற்கு டாடாவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையை கையாளும் விதமாக இந்த சிறப்பு சலுகைகளை டாடா அறிவித்தள்ளது.
இந்த வைரசின் காரணமாக டாடா நிறுவனம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்தது. தற்போதும் சந்தித்து வருகின்றது. எனவே சிறப்புத் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் டாடா இறங்கியிருக்கின்றது.
அதேசமயம், இந்த சிறப்பு கடன் திட்டத்தில் ஐந்து வருடங்களுக்கான நிதியுதவிக்கு 100 சதவீத கடனை வழங்கவும் டாடா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) டாடா வெளியிட்ட அறிக்கையில், "இந்த சலுகை தகுதியுள்ள சம்பளத்தைப் பெறுபவர் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கருர் வைஸ்யா வங்கியுடனான (கே.வி.பி) கூட்டின் மூலம் இந்த சலுகை வழங்கப்படுகிறது" தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, டாடா நிறுவனம் இந்த சிறப்பு கடன் திட்டத்தை வழங்க கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த இணைவின் மூலமே நீண்ட நாள் கடன் திட்டங்களையும் அது வழங்க இருக்கின்றது. அதாவது, எட்டு வருடங்கள் வரையிலான இஎம்ஐ திட்டத்தை அது வழங்க இருக்கிறது. இதற்காக கரூஸ் வைஸ்யா வங்கியுடன் மட்டுமின்றி வேறு சில நிதி நிறுவனங்களுடனும் டாடா கூட்டு வைத்து வருகின்றது.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350