Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Movies ’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பயணிகள் வாகன விற்பனை பிரிவை விற்க சீன நிறுவனத்துடன் பேச்சு... டாடா விளக்கம்!
பயணிகள் வாகனப் பிரிவை விற்பனை செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் பேச்சு நடந்து வருவதாக வெளியானத் தகவலுக்கு டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது டாடா மோட்டார்ஸ். கார், பஸ், டிரக், சிறிய வகை சரக்கு வாகனங்கள் என பல்வேறு வகை வாகனங்களை டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது. குறிப்பாக, வர்த்தக வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்மை வகிக்கிறது.
அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடங்கிய பயணிகள் வாகன விற்பனைப் பிரிவு தொடர்ந்து எதிர்பார்த்த அளவு விற்பனை வளர்ச்சியை பெற முடியாமல் தவித்து வருகிறது.
பயணிகள் வாகன விற்பனைப் பிரிவை தூக்கி நிறுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் கற்றை வித்தைகளையும் போட்டு பார்த்தும், அது பிரயோஜனமாக இல்லை. தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறது.
இதனால், பயணிகள் வாகன விற்பனைப் பிரிவு குறித்து டாடா மோட்டார்ஸ் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. அதாவது, உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனைப் பிரிவின் 49 சதவீத பங்குகளை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவித்தன.
மேலும், ஆசியா அல்லது ஐரோப்பாவை சேர்ந்த நிறுவனங்களுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கூடிய விரைவில் விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் முயன்று வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.
சீனாவை சேர்ந்த கீலி, செர்ரி உள்ளிட்ட நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தையை டாடா நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில், செர்ரி நிறுவனம் ஜாகுவார் லேண்ட்ரோவர் சீனப் பிரிவின் 50 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்த நிலையில், இந்த செய்திக்கு டாடா மோட்டார்ஸ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பயணிகள் வாகன பிரிவை விற்பனை செய்வதாக வெளியான அந்த தகவலில் உண்மை இல்லை என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகவும் வலுவான வாகன விற்பனை கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர் தளத்தை டாடா மோட்டார்ஸ் பெற்றிருப்பதாகவும், சிறந்த தயாரிப்புகளுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட செய்தியில் துளியும் உண்மை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!