Just In
- 56 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 8 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 8 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Movies Vijay In Kerala - அய்யய்யோ இது என்ன விபரீதம்.. கேரளாவில் நொறுங்கிய விஜய்யின் கார்?.. ட்ரெண்டாகும் வீடியோ
- News தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு எப்போது? பள்ளி கல்வித்துறை சூப்பர் முடிவு
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா மோட்டார்ஸ்!
கார் உள்ளிட்ட பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ். இதுதொடர்பான முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி குழுமம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் பெற்றிருக்கிறது. கார் உள்ளிட்ட சிறிய வகை வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை டாடா மோட்டா்ஸ் உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவிலும் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தக வாகன உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், கார் உள்ளிட்ட பயணிகள் வாகன விற்பனை சந்தையில் மிக பின்தங்கி இருந்தது.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக புத்தம் புதிய கார் மாடல்களை களமிறக்கி, பயணிகள் வாகனச் சந்தையிலும் முன்னிலை பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு ஓரளவு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. எனினும், எதிர்பார்த்த அளவு பலன் இல்லை என்பதை மனதில் வைத்து, பயணிகள் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனமாக மாற்றுவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலமாக, பயணிகள் வாகன விற்பனை பிரிவில் அதிக கவனம் செலுத்துவதற்கும், வருவாய் குறித்த தெளிவான வர்த்தக திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் கருதுகிறது.
பயணிகள் வாகன விற்பனை மற்றும் மின்சார வாகனங்கள் விற்பனையை தனி நிறுவனமாக மாற்றும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் குழுமத்தில் பரஸ்பரம் பிற பிரிவுகளுடன் தொடர்புகள் தக்க வைக்கப்படும்.
இதன்மூலமாக, அதிக முதலீடுகள் தவிர்க்கப்படும். வேறு புதிய பயணிகள் வாகன நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கும் இது சிறப்பாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவின் தலைவராக இருந்த மாயங்க் பரீக் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார். அவருக்கு பதிலாக சைலெஷ் சந்திரா டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளார். வரும் 1ந் தேதி முதல் அவர் பணி ஏற்க உள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மாயங்க் பரீக் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாற்றங்கள் மூலமாக, பயணிகள் வாகன விற்பனைப் பிரிவில் படு தீவிரமாக டாடா மோட்டார்ஸ் களமிறங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், பல புதிய மாடல்களையும் அந்நிறுவனம் வரிசை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!