Just In
- 1 hr ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 2 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 3 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 4 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தேசிய கொடி - அசோக முத்திரையுடன் கெத்து காட்டிய கருடா.. இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரியுமா..?
2020 ஆட்டோ எக்ஸ்போவில் தேசிய கொடி மற்றும் மூன்று சிங்கங்கள் கொண்ட அசோக முத்திரைகளுடன் கருடா என்ற கார் கெத்துகாட்டியுள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.
2020ம் ஆண்டிற்கான 15 ஆட்டோ எக்ஸ்போ கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நேற்று வரை (பிப்ரவரி 13) நடைபெற்றது. இதில் ஏராளமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் எதிர்கால மற்றும் புது முக வாகனங்களை காட்சிப்படுத்தின.
அந்தவகையில், இந்திய ஜம்பவான் நிறுவனமான டாடாவும் கணிசமான புதிய வாகனங்களை காட்சிப்படுத்தியிருந்தது.
குறிப்பாக, டாடாவிற்கென ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டாலில் நிலை நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மட்டும் அனைத்து பார்வையாளர்களையும் தன் வசம் ஈர்த்தது. கருடா என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அந்த வாகனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் ஸ்டாராக மாறியது.
ஜனாதிபதிகள் பயன்படுத்தும் ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரை என்ஐடி (தேசிய வடிவமைப்பு நிறுவனம்) மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
இதனை முழுக்க முழுக்க கற்பனையின் அடிப்படையிலேயே என்ஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இப்படிதான் ஒவ்வொரு வாகனங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றது. தற்போது, டாடா நிறுவனத்தின் குளோபல் டிசைன்களுக்கான துணைத் தலைவராக பணியாற்றி வரும் பிரதாப் போஸ் என்ஐடி-இன் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுகுறித்து டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த காரை என்ஐடி மாணவர்கள் ஜனாதிபதியின் லிமோசைன் வாகனத்தை அடிப்படை கருத்தாக உருவாக்கியிருப்பாக தெரவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக டாடாவின் சில வாகன நுணுக்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாடாவின் சியரா மற்றும் எச்பிஎக்ஸ் ஆகிய கான்செப்ட் மாடல்களில் உள்ள சில அம்சங்கள் இந்த கருடா வாகனத்தில் இடம்பெற்றிருப்பதை நம்மால் மிக தெளிவாக காண முடிகின்றது.
இதனை, கருடாவில் இடம்பெற்றிருக்கும் ஸ்லீக் டைப்பிலான டிஆர்எல்கள் அதன்கீழே நிறுவப்பட்டிருக்கும் ஹெட்லேம்ப் க்ளஸ்டர் உள்ளிட்டவை உறுதி செய்கின்றன.
இத்துடன், இந்த லிமோசைன் காருக்கு மிகவும் கவர்ச்சியான தோற்றம் வழங்க வேண்டும் என்பதற்காக 26 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதனை டாடாவின் தயாரிப்பு என சித்தரிக்கும் விதமாக முன் மற்றும் பின் பக்கங்களில் டாடா பேட்ஜ்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இத்துடன், அசோகாவின் மூன்று சிங்கங்கள் முத்திரை காரின் கடைசி பில்லர்களில் நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, முகப்பு மற்றும் இன்டிகேட்டர்களுக்கு எல்இடி மின் விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காரின் கூடுதல் கவர்ச்சிக்காக அடர்ந்த நீல நிறம் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட காரை தான் உலகின் வல்லாதிக்க நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வாகனங்களை அந்நாட்டை மையமாகவே கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களே கஸ்டமைஸ் செய்து வழங்கி வருகின்றன.
அவ்வாறு, அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் கடில்லாக் ஒன் ஏகேஏ வாகனத்தை அந்நாட்டு ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைத்து வழங்கியது. இது உலகில் உள்ள அதீத பாதுகாப்பு வசதி கொண்ட வாகனங்களில் ஒன்றாகும். இதைதான் இந்திய ஜனாதிபதியும் பயன்படுத்தி வருகின்றார்.
இந்த காரில் என்ன மாதிரியான வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்ற தகவலை அந்த நிறுவனங்கள் பாதுகாப்பு கருதி வெளியிடவில்லை.
இதேபோன்றதொரு காரைதான் ரஷ்யாவின் ஜனாதிபதி வால்டிமிர் புதின் பயன்படுத்தி வருகின்றார். அவுரஸ் செனட் லிமோசைன் என்றழைக்கப்படும் அந்த காரை அந்நாட்டைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனம் கட்டமைத்திருக்கின்றது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!