Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தரமான சம்பவத்தை செய்த சந்திரசேகர ராவ்... சந்தோஷத்தில் தெலங்கானா மாநில மக்கள்... என்னனு தெரியுமா?
தெலங்கானா மாநில அரசு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு மிகவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும் என்பதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம் என்பதால், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியும் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.
எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா போன்ற மாநில அரசுகளும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தீவிரமாக உள்ளன. இந்த வரிசையில் மின்சார வாகனங்களை பிரபலமாக்குவதற்காக தெலங்கானா மாநில அரசு தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன் அண்டை மாநிலமான ஆந்திரா மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போன்று தற்போதைய முதல்வர் ஜெகன் மோகனும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதற்கு இணையாக தெலங்கானாவும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்படி புதிய மின்சார வாகன மற்றும் ஆற்றல் சேமிப்பு தீர்வு கொள்கைக்கு, தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை நேற்று (ஆகஸ்ட் 5) ஒப்புதல் வழங்கியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதே இதன் முக்கியமான நோக்கம்.
அத்துடன் சலுகைகளை வழங்குவதன் மூலம் மின்சார வாகன துறை சார்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. இந்த புதிய கொள்கையின்படி, முதலில் வாங்கப்படும் 2 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கும், 5,000 தனியார் மின்சார கார்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100 சதவீத விலக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலில் வாங்கப்படும் 20,000 மின்சார மூன்று சக்கர வாகனங்கள், 5,000 மின்சார வர்த்தக பயணிகள் வாகனங்கள் (டாக்ஸி மற்றும் சுற்றுலா கேப்கள் ஆகியவை) மற்றும் 500 மின்சார பேருந்துகளுக்கும் இந்த விலக்கு பொருந்தும். சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100 சதவீத விலக்கு வழங்கப்பட்டுள்ளதால், மின்சார வாகனங்களின் ஆன் ரோடு விலை குறையும்.
பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்குவதில் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல்லே அவற்றின் அதிக விலைதான். எனவே விலையை குறைக்கும் முயற்சியாக இந்த சலுகையை தெலங்கானா மாநில அரசு வழங்கியுள்ளது. இதன் காரணமாக தெலங்கானா மாநிலத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தெலங்கானாவை மின்சார வாகனங்களின் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தெலங்கானாவில் தொழிற்சாலைகளை நிறுவ முன்வரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது. இதன்பேரில் ஒரு சில முன்னணி நிறுவனங்கள் தெலங்கானாவில் தங்கள் ஆலைகளை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய முதலீடுகள் மூலமாக ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மத்திய, மாநில அரசுகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு பிரச்னைகள் காரணமாகவும் எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள்தான் இந்திய சாலைகளை ஆளப்போகின்றன.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!