Just In
- 17 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 39 min ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 1 hr ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
Don't Miss!
- Movies விஜய் கையில் இவ்வளவு பெரிய காயமா?.. வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் சோகம்
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மிரண்டுபோன பார்வையாளர்கள்... இந்த கார் இப்படி செய்யும்னு யாருமே எதிர்பார்க்கல... வீடியோ!
பிரபல காரொன்று யாருமே நம்பவே முடியாத வகையில் படு தோல்வியைக் குறிப்பிட்ட செயல் விளக்கத்தின்போது பெற்றிருப்பது அதன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
டெஸ்லா நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த மின்சார கார்களில் மாடல் 3-ம் ஒன்று. இதுவே அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராக இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் இன்றளவும் விற்பனைக்கு வரவில்லை என்றாலும், இந்தியர்கள் சிலர் இக்காரைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு, இந்தியாவில் டெஸ்லாவின் மாடல்3 மின்சாரக் காரை பயன்படுத்துவோரின் பட்டியலில் அம்பானி குடும்பத்தினரும் அடங்குவர். அந்தளவிற்கு சிறப்பு வாய்ந்த மின்சார காராக மாடல் 3 இருக்கின்றது. இந்த நிலையில் இக்கார்குறித்த ஷாக்களிக்கும் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி அதன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களின் தனி சிறப்பே அதன் தன்னாட்சி தொழில்நுட்பம்தான். இந்த தொழில்நுட்பம்குறித்த பல பரீட்சையிலேயே டெஸ்லா மாடல் 3 மின்சார கார் தோல்வியைச் சந்தித்திருக்கின்றது. தன்னாட்சி தொழில்நுட்பத்தின் மூலம் ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் மற்றும் டிரைவரில்லா கார் ஓட்டும் வசதி உள்ளிட்டவற்றை டெஸ்லா வழங்கி வருகின்றது.
இதில் தானாக பிரேக் பிடிக்கும் அம்சமே பெரும்பாலானோரால் பயன்படுத்தும் வசதியாக இருக்கின்றது. இது, அவசர காலங்களில் தானாகவே இயங்கும். அதாவது, விபத்து நேருவதற்கு முன்னரே பிரேக் பிடித்து காரில் பயணிப்பவரையும், காரையும் முன் கூட்டியே காப்பாற்ற உதவும்.
இந்த அம்சமே டெஸ்லா மாடல்3 கார்குறித்த செயல் விளக்கத்தின்போது தோல்வியைச் சந்தித்திருக்கின்றது. சீனாவிலேயே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் டெஸ்லா மாடல் 3 மின்சார காருக்கு நேர்ந்துதுள்ளது. டெஸ்லா மாடல் 3 மின்சார காரின் இந்த தோல்வி அதன் ஆர்வலர்களின் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
ஏனெனில், டெஸ்லாவின் தன்னாட்சி தொழில்நுட்ப வசதி இதுவரை பலரை விபத்து நேர்வதற்கு முன்னரே உடனடியாகச் செயல்பட்டுக் காப்பாற்றியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வீடியோக்கள் மற்றும் தகவல்கள் தற்போது இணையத்தில் இருக்கின்றன.
குறிப்பாக, விபத்து நிகழ்வதற்கு முன்னரே தானியங்கி பிரேக்கிங் வசதி செயல்பட்டு பெரும் விபத்தைத் தவிர்ப்பதுபோன்ற காட்சிகள் தற்போதும் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே செயல் விளக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட டெஸ்லா மின்சார காரொன்று மனித டம்மி மீது மோதி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது.
இதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தன்னாட்சி அம்சத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. அதேசமயம், டெஸ்லா மாடல்3 மின்சார கார் மனித டம்மியை மோதிய பின்னர் உடனடியாக நிறுத்தப்படுவதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், இக்காரின் தன்னாட்சி தொழில்நுட்பம் மிக பொறுமையாக டம்மி கடப்பதை உணர்ந்திருக்கும் என யூகிக்கப்படுகின்றது.
இதனால், இந்த எதிர்பாராத சம்பவம் நேர்ந்திருக்கின்றது. ஒரு வேலை இக்காரின் தானியங்கி வசதி இயங்காமல் இருந்திருந்தால் டம்மி மீது மோதிய பின்னரும் அக்கார் நிற்காமல் சென்றிருக்கும். ஆனால், அங்கு அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை. எனவே, டம்மியை முன்னரே அறிந்துக் கொள்ள தவறியதே இந்த தோல்விக்கு காரணம் என கூறப்படுகின்றது.
டெஸ்லா நிறுவனத்தைப் போலவே தன்னாட்சி தொழில்நுட்ப வசதியைப் பரிசோதிக்கும் நிகழ்வில் பல நிறுவனங்கள் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. அதில், ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் காரும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், ஃபோக்ஸ்வேகன் மற்றும் வோல்வோ ஆகிய நிறுவனங்கள் இந்த பல பரீட்சையில் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!