Just In
- 11 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 52 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
Don't Miss!
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்
பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனமாக மாறி இருக்கிறது. சொகுசான பயண அனுபவம், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், அதிக பட்ச பயண தூரத்தை வழங்கும் செயல்திறன் மிக்க பேட்டரி மற்றும் மின் மோட்டார்களுடன் டெஸ்லா கார்கள் உலக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் மெகா திட்டத்தை கையில் எடுத்துள்ளது டெஸ்லா நிறுவனம். இதற்கு தக்கவாறு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிலும் களமிறங்குவதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு டெஸ்லா மாடல் 3 காருக்கு உலக அளவில் புக்கிங் துவங்கப்பட்டது. அப்போது, இந்தியாவிலிருந்தும் புக்கிங் செய்து கொள்ளும் வாய்ப்பு வழஙகப்பட்டது. ஆனால், இதுவரை கார் டெலிலிரி கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், விரைவில் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனிடையே, பெங்களூரில் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.
இந்த மாத இறுதியில் கர்நாடக அரசு அதிகாரிகளுடன் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் சந்தித்து பேச உள்ளனர். அப்போது, பெங்களூரில் ஆய்வு மையத்தை துவங்குவதற்கான திட்டம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருந்து வருகிறது. பெங்களூரில் டெஸ்லா ஆய்வு மையம் அமைந்தால், அது உலக அளவில் அந்நிறுவனத்தின் இரண்டாவது ஆய்வு மையமாக இருப்பதுடன், அமெரிக்காவிற்கு வெளியே அமையும் முதல் ஆய்வு மையமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியாவில் விரைவில் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் குறிப்பிட்டது நினைவுக்கூறத்தக்கது. எனவே, ஆய்வு மையம் மட்டுமின்றி, இந்தியாவில் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் டெஸ்லா ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!