Just In
- 16 min ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 2 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
Don't Miss!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Movies Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா திட்டம்
பெங்களூரில் எலெக்ட்ரிக் கார் ஆய்வு மையத்தை அமைக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனமாக மாறி இருக்கிறது. சொகுசான பயண அனுபவம், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், அதிக பட்ச பயண தூரத்தை வழங்கும் செயல்திறன் மிக்க பேட்டரி மற்றும் மின் மோட்டார்களுடன் டெஸ்லா கார்கள் உலக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் மெகா திட்டத்தை கையில் எடுத்துள்ளது டெஸ்லா நிறுவனம். இதற்கு தக்கவாறு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்தியாவிலும் களமிறங்குவதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு டெஸ்லா மாடல் 3 காருக்கு உலக அளவில் புக்கிங் துவங்கப்பட்டது. அப்போது, இந்தியாவிலிருந்தும் புக்கிங் செய்து கொள்ளும் வாய்ப்பு வழஙகப்பட்டது. ஆனால், இதுவரை கார் டெலிலிரி கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், விரைவில் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனிடையே, பெங்களூரில் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கான ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தள செய்தி தெரிவிக்கிறது.
இந்த மாத இறுதியில் கர்நாடக அரசு அதிகாரிகளுடன் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் சந்தித்து பேச உள்ளனர். அப்போது, பெங்களூரில் ஆய்வு மையத்தை துவங்குவதற்கான திட்டம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருந்து வருகிறது. பெங்களூரில் டெஸ்லா ஆய்வு மையம் அமைந்தால், அது உலக அளவில் அந்நிறுவனத்தின் இரண்டாவது ஆய்வு மையமாக இருப்பதுடன், அமெரிக்காவிற்கு வெளியே அமையும் முதல் ஆய்வு மையமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியாவில் விரைவில் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் குறிப்பிட்டது நினைவுக்கூறத்தக்கது. எனவே, ஆய்வு மையம் மட்டுமின்றி, இந்தியாவில் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் டெஸ்லா ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்