Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
80s, 90s கார்களை தேடி பார்த்து திருடிய கொள்ளையன்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்... போலீஸே மிரண்டாங்க
1980 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் வெளியாகிய கார்களாக பாார்த்து திருடிய கொள்ளையன் போலீஸாரிடத்தில் பிடிபட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டில் அரங்கேறும் திருட்டுச் சம்பவங்கள் பலவற்றிற்கு வறுமையே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் அரங்கேறும் கொள்ளை சம்பவங்களுக்கு இதுவே தலையாய காரணமாக உள்ளது. ஆனால், ஒரு சிலர் மட்டும் ஆடம்பர வாழ்க்கையின் மீதுள்ள மோகத்தின் காரணமாக திருட்டையே தொழிலாக செய்து வருகின்றனர்.
ஆனால், நாம் இங்கு பார்க்கவிருக்கும் இந்த சம்பவம் சற்றே வித்தியாசமானதாக உள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இதற்கு முன்பு நாம் கேள்விப்பட்டிராத திருட்டுச் சம்பவமாக இது இருக்கின்றது.
இந்த சம்பவத்தில் சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞர், கார்களின் மீதிருந்த அதிக ஆர்வம் காரணமாக 80 மற்றும் 90 ஆகிய காலக்கட்டங்களில் வெளியாகிய கார்களை மட்டும் தேடிப் பார்த்து திருடி வந்துள்ளார்.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
காணமல் போன ஜெனரேட்டரைப் பற்றி மேற்கொள்ளப்பட்டு வந்த வழக்கு விசாரணையின்கீழ் இந்த விநோத திருட்டுச் சம்பவம் பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. முழுவதும் மாறுபட்ட தகவலை அடக்கிய இந்த சம்பவம் ஸ்பெயினில் அரங்கேயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை 'தி டிரைவ்' என்ற ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பெயின், பாஸ்க்யூ (Basque) பகுதி காவல்நிலைய போலீஸாருக்கு புகார் ஒன்று வந்துள்ளது. அதில், தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் தங்களின் கட்டுமான பணி தளத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் ஒன்று களவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த ஆய்வினைச் செய்யத் தொடங்கியப் போலீஸார், ஜெனரேட்டர் திருடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட டிரக்கை வைத்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்த விசாரணை தனியார் ஒருவருக்கு சொந்தமான கராஜுக்கு கொண்டுபோய் விட்டது.
அங்கு ஜெனரேட்டர் மற்றும் அதை திருடப் பயன்படுத்தப்பட்ட டிரக் உள்ளிட்டவை போலீஸாரிடம் சிக்கின. மேலும், அவர்கள் தேடிச் சென்றதைக் காட்டிலும் ஆச்சரியமான நிகழ்வு ஒன்று அவர்களுக்கு அங்கு காத்திருந்தது.
ஆம், அந்த இடத்தில்தான் ஐகானிக் மாடல்கள் என்றழைக்கப்படும் வின்டேஜ் கார்கள் சுமார் 26 நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அவையனைத்தும் 1980 மற்றும் 1990 ஆகிய வருடங்களுக்குள் விற்பனைக்கு வந்தவை என கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம், அவையனைத்தும் ரேலி மற்றும் டூரிங் ரக கார்களாக இருந்தன. இவற்றைக் கண்டு அதிர்ந்துபோன போலீஸார், கார்கள் அனைத்தையும் ஆய்வு செய்தனர்.
அதில், பல போலியான சேஸிங் எண்களைக் கொண்டவையாக இருந்தன. மேலும், அவையனைத்தும் பல்வேறு இடங்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அந்த மர்ம நபரிடம் போலீஸார் விசாரணைச் செய்தனர். ஆனால், அந்த நபரோ பெயரைக்கூட சொல்லாமல் போலீசாரை இழுத்தடிப்பு செய்ததாகக் கூறப்படுகின்றது. இதுவே, போலீஸாரை மிரள வைக்கும் வைக்கும் இருக்கின்றது.
அந்த நபர் திருடிய கார்களை வைத்து பார்க்கையில் அவர் கார்கள்மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பவர் தெரியவந்துள்ளது. அதிலும், வாகனங்களின் மீது அவருக்கு தனித்துவமான ஆர்வமிருப்பதும் தெரிகின்றது. இதன் காரணத்தினாலயே தனித்துவமான கார்களாகத் தேடிபார்த்து அவர் திருடி வந்திருக்கின்றார்.
இவரிடம் இருந்து கார்கள் மட்டுமின்றி இரு கை துப்பாக்கிகள் மற்றும் இந்திய மதிப்பில் ரூ. 8 லட்சம் வரையிலான ரொக்கத்தைப் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
தொடர்ந்து, பழமை வாய்ந்த கார்கள் குறித்த விசாரணையையும் அவர்கள் தொடர்ந்துச் செய்து வருகின்றனர்.
இதற்கு முன்பும் இதுபோன்ற வாகன திருட்டு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், அவற்றைக் காட்டிலும் மிக மிக வித்தியாசமானதாக இந்த திருட்டுச் சம்பவம் இருக்கின்றது. இதனால், போலீஸாரே தற்போது உறைந்து நிற்கின்றனர். மேலும், இவர் எப்படி இத்தனை நாட்களாக காவல்துறையின் கண்களில் சிக்காமல் இருந்தார் என்பதுகுறித்த ஆய்வையும் அவர்கள் செய்து வருகின்றனர்.
காவல்துறை அந்த மர்ம நபரிடம் இருந்து பறிமுதல் செய்த கார்களின் பட்டியல் இதோ:
இ30 பிஎம்டபிள்யூ எம்3 (இரண்டு யூனிட்டுகள்).
ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்.எஸ்., காஸ்வொர்த்.
ஃபோர்டு சியரா ஆர்எஸ்500 காஸ்வொர்த்.
மிட் என்ஜின் ரெனால்ட் 5 டர்போ ஹேட்ச்பேக்.
பியூஜியோட் 205 ஜிடிஐ...
லான்சியா டெல்டா எச்எஃப் இன்டெக்ரேல் எவோலுஜியோன் 1 மார்டினி 6.
மெர்சிடிஸ் பென்ஸ் 190 இ காஸ்வொர்த் எவல்யூஷன் II ப்ளாஷ்வார்ஸ் (நீல-கருப்பு).
மிட்சுபிஷி லான்சர் எவல்யூஷன் மாடல்கள் (IV, VI, VII மற்றும் ஹோலி கிரெயில் இவிஓ மாடல்கள்). உள்ளிட்டவற்றைப் போலீஸார் தற்போது பறிமுதல் செய்திருக்கின்றனர்.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?