Just In
- 48 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 1 hr ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனா தடுப்பு போரில் டொயோட்டா இந்தியா நிறுவனம் களமிறங்கியது!
கொரோனா தடுப்பு பணிகளுக்கான முயற்சிகளில் டொயோட்டா கார் நிறுவனமும் தீவிரமாக களமிறங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கொரோனா தடுப்புப் பணிகளுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!
இந்த நிலையில், கொரோனோ தடுப்புப் பணிகள் ஒருபுறம் இருந்தாலும், பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலான பணியாக உள்ளது. இதில், தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது, போர் களத்திற்கு செல்லும் வீரனை போல, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் செயலாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது.
இதற்காக, அதிக அளவில் விசேஷமான முக கவசங்கள் மற்றும் உடைகள் தேவைப்படுகின்றன. தேவை மிக அதிகமாக இருக்கும் நிலையில், போர்க்கால அடிப்படையில் இந்த தேவையை நிறைவு செய்வதற்கு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்து இருக்கின்றன.
இதனை மனதில் வைத்து மஹிந்திரா, மாருதி சுஸுகி உள்ளிட்ட பல்வேறு கார் நிறுவனங்களும் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவி மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான முக கவசங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், தற்போது டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும் இணைந்துள்ளது. அந்நிறுவனத்தின் உதிரிபாக சப்ளையரான ஸ்டம்ப் செய்லி அண்ட் சோமப்பா ஸ்பிரிங்க்ஸ் நிறுவனத்தின் மூலமாக முக கவசங்களை தயாரிக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
ஆரம்ப கட்டமாக நாள் ஒன்றுக்கு 275 முக கவசங்களை தயாரித்த இந்த நிறுவனம் தற்போது நாள் ஒன்றுக்கு 5,500 முக கவசங்களை தயாரித்து வருகிறது. இதனை நாள் ஒன்றுக்கு 10,000 யூனிட்டுகள் என்ற அளவில் உயர்த்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.
ஆலைக்கு தொழிலாளர்கள் வருவதற்கான போக்குவரத்து, முக கவசத்தின் டிசைனில் செய்ய வேண்டியிருக்கும் மாறுதல்கள், சப்ளையர்களின் பிரச்னைகளை சரிசெய்து தருவதாகவும், விரைவில் 10,000 இலக்கை எட்டி முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்டம்ப் செயுலி அண்ட் சோமப்பா ஸ்பிரிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஸ் மசானி கூறுகையில்," இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களால் முடிந்த உதவிகளையும், ஒத்துழைப்பையும் அரசுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி.
முக கவசங்கள் தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் போதிய ஒத்துழைப்பை டொயோட்டா நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால், எங்களது தயாரிப்பு முறை மிக எளிதாகி இருக்கிறது," என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா தடுப்புப் பணிகளுக்கான கர்நாடக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடைக்கான காசோலையை டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவிடம் நேரில் வழங்கி இருக்கிறது.
இதுதவிர்த்து, அரசு சார்பில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு பயன்படும் வகையில், 3,000 கொரோனா தடுப்பு கவச உடைகளையும், தினசரி பணியாளர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி உள்ளது. தனது 14 பஸ்களையும் சுகாதாரப் பணியாளர்கள் போக்குவரத்திற்காக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.