Just In
- 20 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சென்னையின் டெட்ராய்டு அந்தஸ்தை மீட்டெடுக்க முண்டாசு கட்டிய முதல்வர் பழனிச்சாமி!
ஆசியாவின் டெட்ராய்டு என்ற அந்தஸ்தை சென்னை மீண்டும் பெறுவதற்கான அதிரடி முயற்சிகளில் முதல்வர் பழனிச்சாமி இறங்கி உள்ளார்.
இந்தியாவின் முக்கிய வாகன உற்பத்தி கேந்திரமாக சென்னை பெயர் பெற்றிருக்கிறது. ஆசியாவிலேயே அதிக அளவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள், உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.
பிஎம்டபிள்யூ, ஹூண்டாய், ஃபோர்டு, ரெனோ - நிஸான் உள்ளிட்ட கார் நிறுவனங்களும், பாரஸ் பென்ஸ் உள்ளிட்ட வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் , ராயல் என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் சென்னை பெருநகரத்தில் செயல்பட்டு வருகின்றன.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
இந்த நிலையில், தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடு மற்றும் கொரோனா பிரச்னை உள்ளிட்டவற்றால் சென்னையின் டெட்ராய்டு அந்தஸ்து மெல்ல கரைந்து வருகிறது. இதனை சரிகட்டி, தொழிற்துறையில் தமிழகத்தை மீண்டும் முன்னோடி மாநிலமாக மாற்றும் முயற்சியில் முதல்வர் பழனிச்சாமி இறங்கி இருக்கிறார்.
இதற்காக, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு உலகின் 11 முன்னணி கார் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் நிலவும் சாதகமான சூழல், மனித வளம், சிறப்புச் சலுகைகள் உள்ளிட்டவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹெர்பெர்ட் டயஸ், ஸ்கோடா தலைமை அதிகாரி பெர்ன்ஹார்டு மயர், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஓலா கல்லேனியஸ், ஆடி தலைவர் மார்கஸ் டியூஸ்மேன், டொயோட்டா தலைவர் அகியோ டொயோடா, பிஎம்டபிள்யூ தலைவர் ஆலிவர் ஸிப்ரே ஆகியோருக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார்.
தவிரவும், ஜாகுவார் லேண்ட்ரோவர் தலைமை அதிகாரி ரால்ஃப் டி ஸ்பெத்,, ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் மேரி டி பாரா, டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் ஆகியோருக்கும் முதல்வர் பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள், ஏற்றுமதிக்கு ஏதுவான துறைமுகம், விமானப் போக்குவரத்து வசதி, சாலை போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளையும் குறிப்பிட்டுள்ளார். இதனால், முன்னணி கார் நிறுவனங்கள் இந்தியாவில் விரிவாக்கத் திட்டத்தை கையில் எடுத்தால், தமிழகத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளிலிருந்து மீள்வதற்காக சிறப்புக் குழு ஒன்றை முதல்வர் பழனிச்சாமி அமைத்தார். அந்த 17 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு துறையிலும் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களை கண்டறிந்து நேரடியாக முதலீடு செய்ய அழைப்பு விடுக்குமாறு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் இந்த கடிதத்தை அவர் அனுப்பி உள்ளார். ஏற்கனவே ஆப்பிள் மற்றும் அமேஸான் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் அவர் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!