Just In
- 4 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 30 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 52 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 2 hrs ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டடது. பின்னர், வர்த்தக செயல்பாடுகள், அவசர தேவைகள் கருதி, பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நான்கு மாதங்களுக்கு பின்னர் நேற்றுமுதல் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வழிகாட்டு முறைகளுடன் ஓட்டுனர் பயிற்சிகள் செயல்படுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பயிற்றுனர், பணியாளர்கள், பயிற்சி பெறும் ஓட்டுனர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம்.
கர்ப்பிணி பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், 65 வயதை கடந்த முதியவர்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரில் பயிற்சி வழங்கும்போது ஏசி போடக்கூடாது என்பதுடன் ஜன்னல்களை திறந்து வைத்து இயக்க வேண்டும். அதேபோன்று, பயிற்சி வழங்குகையில், பயிற்றுனர் மற்றும் அதிகபட்சமாக 2 பயிற்சி பெறும் ஓட்டுனர்கள் மட்டுமே காரில் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளிலும் சானிடைசர், உடல் வெப்பத்தை அளவிட உதவும் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும். பயிற்றுனர், அலுவலகப் பணியாளர்கள், பயிற்சி பெற வருவோருக்கு கட்டாயம் உடல் வெப்ப பரிசோதனை செய்வதும் அவசியம்.
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு வருவோரின் பெயர், மொபைல்போன் எண், ஆதார் எண் உள்ளிட்டவை தனி பதிவேட்டில் சேகரிக்க வேண்டும் என்றும், அந்த பதிவேடு, அரசின் ஆய்வுப் பணி அதிகாரியிடம் காட்டுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதும் அவசியம். கொரோனா தடுப்பு முறைகள் குறித்த வாசகங்களுடன் கூடிய அறிவிப்பு பலகைகளும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பொருத்துவது அவசியம். வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் பாடம் நடத்துவது அவசியம்.
ஒரே நேரத்தில் அதிக ஓட்டுனர்களை வைத்து பயிற்சி கொடுக்கக்கூடாது. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறக்கக்கூடாது.
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!