Just In
- 14 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பழைய விலையிலேயே ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல்.. வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டொயோட்டா!
டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பல லட்சம் விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் இன்ப அதிர்ச்சியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது டொயோட்டா நிறுவனம். கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.
இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாகவும், முதன்மையான மாடலாகவும் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது. பிரம்மாண்ட தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், நீடித்த உழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் இந்த எஸ்யூவி சிறப்பானதாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல்கள் விலை கணிசமாக உயரும் என்று தகவல்கள் வெளியாகின. அதாவது லட்சங்களில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த எஸ்யூவியை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கும் விதத்தில், பிஎஸ்-4 மாடலின் விலையிலேயே புதிய பிஎஸ்-6 மாடலும் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடல் ரூ.28.18 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும்.
இந்த எஸ்யூவியில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் பிஎஸ்-6 மாடல் கிடைக்கும். டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் 2.7 லிட்டர் பெட்ரோல் பிஎஸ்-6 மாடலின் எஞ்சின் 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
இதன் 2.8 லிட்டர் பிஎஸ்-6 டீசல் மாடலில் 174 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல், டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலானது 2 வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும், டீசல் மாடலில் மட்டும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கிடைக்கும்.
பிஎஸ்-6 எஞ்சினை தவிர்த்து, வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. வசதிகளிலும் புதிதாக ஏதும் சேர்க்கப்படவில்லை. இந்த காரின் கேபின் பழுப்பு மற்றும் பீஜ் என இரண்டு இன்டீரியர் வண்ணத் தேர்வுளில் கிடைக்கும்.
இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை உள்ளன.
அண்மையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு வந்தது. ரூ.1.50 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. ஆனால், டொயோட்டா ஃபார்ச்சூனர் பிஎஸ்-6 மாடலின் விலையில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!