Just In
- 15 min ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Movies சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்!
டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
புதிய கார் உருவாக்கப் பணிகளுக்கான முதலீடுகளை பெருமளவு குறைக்கும் விதத்தில் டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய நிறுவனங்கள் கூட்டணியாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் சுஸுகியின் அங்கமாக செயல்பட்டு வரும் மாருதியின் கார்களை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் சிறிய மாற்றங்களை செய்து தனது பிராண்டில் அறிமுகப்படுத்தி வருகிறது.
முதல் மாடலாக மாருதி பலேனோ கார் டெயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்த மாடலை களமிறக்கும் முனைப்பில் டொயோட்டா இறங்கி உள்ளது.
இதன்படி, இரண்டாவது மாடலாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் மாற்றங்களை செய்து வருகிறது டொயோட்டா கார் நிறுவனம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவலை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த புதிய எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. அதாவது, கொரோனா தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில், புதிய க்ரில் அமைப்பு, பம்பர், ஹெட்லைட் க்ளஸ்ட்டர்களில் சிறிய மாற்றங்கள் செய்யபட்டு இருக்கும். இந்த காரில் புதிய டிசைனிலான அலாய் வீல்கள் பயன்படுத்தப்படும்.
அதேபோன்று, உட்புறத்திலும் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். புதிய வண்ணத்திலான இன்டீரியர் மற்றும் புதிய வெளிப்புற வண்ணத் தேர்வுகளும் கொடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.
மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.03 கிமீ மைலேஜை வழங்கும். ஆட்டோமேட்டிக் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்படுகிறது. இதனால், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட அதிக மைலேஜை வழங்கும். அதாவது, லிட்டருக்கு 18.76 கிமீ மைலேஜை வழங்கும் வாய்ப்பை பெறும்.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ரூ.7.50 லட்சம் முதல் ரூ.11.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் சலுகை திட்டங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான வாய்ப்புகளை டொயோட்டா வழங்கும் என எதிர்பார்க்கலாம்.