Just In
- 12 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- News
ஜோ பிடன் அமைச்சரவையில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்
- Movies
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- Sports
அதிரடி மன்னர்களின் அதிரடி அரைசதங்கள்... ஏமாற்றம் அளிக்காத இந்திய அணியின் பேட்டிங்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழகத்தில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் சேஸிங் சம்பவம்! பட்டப்பகலில் அரங்கேறிய உறைய வைக்கும் நிகழ்வு
திருச்சி போலீஸார் சுமார் 60 கிமீ விடாமல் விரட்டிச் சென்று லாரி ஒன்றை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் அரங்கேறிய சேஸிங் சம்பவம் பற்றிய தகவலை இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.

திருச்சி போலீஸார் சுமார் 60 கிமீ விடாமல் விரட்டிச் சென்று லாரி ஒன்றை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் அரங்கேறிய சேஸிங் சம்பவம் பற்றிய தகவலை இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.

திருச்சியைச் சேர்ந்தவர் முத்தப்பன். இவர் அரிசி மில் ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு சொந்தமாக குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் லாரிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில், ஒன்றை மர்ம நபர் ஒருவர், லாரியின் டிரைவர் மதிய உணவிற்காக சென்றிருந்தபோது லாவமாக திருடிச் சென்றார்.

இதைக் கண்டுபிடித்த மில்லின் கணக்காளர் குமார், உரிமையாளர் முத்தப்பாவிற்கு எச்சரிக்கைக் கொடுத்தார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் லாரியை விரட்டவும் செய்தார். இவர் மட்டுமின்றி உரிமையாளர் முத்தப்பா மற்றும் ஒரு சிலர் காரின் மூலமாகவும் லாரி விரட்டினர்.

இதற்கிடையில், சம்பவம்குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், லாரியை திருடியவர் விடாமல் வாகனத்தை வேகமாக இயக்கிய வண்ணமே இருந்தார். இந்த நிலையில், ரயில்வே கிராஸிங் பகுதியில் லாரி நிற்க நேரிட்டது. அப்போது ஒரு சிலர் லாரியில் ஏறிக் கொண்டனர்.

இருப்பினும், அந்த திருடர் லாரியை விட்டு இறங்காமலே தொடர்ச்சியாக லாரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் முயற்சியிலேயே ஈடுபட்டார். போலீஸார் சிலர் முயன்றும், அவர்களை தள்ளிவிடும் செயலில் அந்த மர்ம நபர் இறங்கினார். இருப்பினும், இரு போலீஸார் மற்றும் லாரிக்குள் இருந்த அரிசி மில் பணியாளர்கள் இணைந்து அவரை கீழே தள்ளி போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.

இந்த சம்பவத்தால் திருச்சி நெடுஞ்சாலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமீபகாலமாக தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைத் தடுக்கப் போலீஸார் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் திருட்டு தினந்தோறும் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றது.

இந்த நிலையிலேயே சினிமாக் காட்சிகளை மிஞ்சுமளவிற்கு லாரி திருட்டுச் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. சுமார் 60 கிமீ விரட்டுதலுக்கு பின்னரே திருடப்பட்ட லாரி மற்றும் திருடனைப் போலீஸார் மடக்கிப்பிடித்திருக்கின்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த திருட்டுச் சம்பவம் திருச்சி நகரவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று பெரிய வாகனங்களை திருடிக் கொண்டு செல்லும் நபர்களைக் கையாளும்போது சற்று கவனத்துடனேயே கையாள வேண்டும். ரயில் கிராஸிங்கில் நின்ற திருடன் தப்பிப்பதில் இன்னும் வேகத்தையும், தீவிரத்தையும் காட்டியிருந்தால் நிலைமை மிக மோசமானதாக மாறியிருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு அசம்பாவிதமும் இந்த சம்பவத்தின்போது அரங்கேறவில்லை.