Just In
- 1 hr ago பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
- 2 hrs ago ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- 3 hrs ago சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
- 6 hrs ago ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
Don't Miss!
- News முரசா? பம்பரமா? தேமுதிக வேட்பாளருக்கு பம்பரத்தில் ஓட்டு கேட்ட சிவி சண்முகம்! சமாளித்தது தான் ஹைலைட்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தமிழகத்தில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் சேஸிங் சம்பவம்! பட்டப்பகலில் அரங்கேறிய உறைய வைக்கும் நிகழ்வு
திருச்சி போலீஸார் சுமார் 60 கிமீ விடாமல் விரட்டிச் சென்று லாரி ஒன்றை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் அரங்கேறிய சேஸிங் சம்பவம் பற்றிய தகவலை இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.
திருச்சி போலீஸார் சுமார் 60 கிமீ விடாமல் விரட்டிச் சென்று லாரி ஒன்றை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் அரங்கேறிய சேஸிங் சம்பவம் பற்றிய தகவலை இந்த பதிவில் காணவிருக்கின்றோம்.
திருச்சியைச் சேர்ந்தவர் முத்தப்பன். இவர் அரிசி மில் ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு சொந்தமாக குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் லாரிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில், ஒன்றை மர்ம நபர் ஒருவர், லாரியின் டிரைவர் மதிய உணவிற்காக சென்றிருந்தபோது லாவமாக திருடிச் சென்றார்.
இதைக் கண்டுபிடித்த மில்லின் கணக்காளர் குமார், உரிமையாளர் முத்தப்பாவிற்கு எச்சரிக்கைக் கொடுத்தார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் லாரியை விரட்டவும் செய்தார். இவர் மட்டுமின்றி உரிமையாளர் முத்தப்பா மற்றும் ஒரு சிலர் காரின் மூலமாகவும் லாரி விரட்டினர்.
இதற்கிடையில், சம்பவம்குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், லாரியை திருடியவர் விடாமல் வாகனத்தை வேகமாக இயக்கிய வண்ணமே இருந்தார். இந்த நிலையில், ரயில்வே கிராஸிங் பகுதியில் லாரி நிற்க நேரிட்டது. அப்போது ஒரு சிலர் லாரியில் ஏறிக் கொண்டனர்.
இருப்பினும், அந்த திருடர் லாரியை விட்டு இறங்காமலே தொடர்ச்சியாக லாரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் முயற்சியிலேயே ஈடுபட்டார். போலீஸார் சிலர் முயன்றும், அவர்களை தள்ளிவிடும் செயலில் அந்த மர்ம நபர் இறங்கினார். இருப்பினும், இரு போலீஸார் மற்றும் லாரிக்குள் இருந்த அரிசி மில் பணியாளர்கள் இணைந்து அவரை கீழே தள்ளி போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.
இந்த சம்பவத்தால் திருச்சி நெடுஞ்சாலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சமீபகாலமாக தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைத் தடுக்கப் போலீஸார் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் திருட்டு தினந்தோறும் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றது.
இந்த நிலையிலேயே சினிமாக் காட்சிகளை மிஞ்சுமளவிற்கு லாரி திருட்டுச் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. சுமார் 60 கிமீ விரட்டுதலுக்கு பின்னரே திருடப்பட்ட லாரி மற்றும் திருடனைப் போலீஸார் மடக்கிப்பிடித்திருக்கின்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த திருட்டுச் சம்பவம் திருச்சி நகரவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று பெரிய வாகனங்களை திருடிக் கொண்டு செல்லும் நபர்களைக் கையாளும்போது சற்று கவனத்துடனேயே கையாள வேண்டும். ரயில் கிராஸிங்கில் நின்ற திருடன் தப்பிப்பதில் இன்னும் வேகத்தையும், தீவிரத்தையும் காட்டியிருந்தால் நிலைமை மிக மோசமானதாக மாறியிருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு அசம்பாவிதமும் இந்த சம்பவத்தின்போது அரங்கேறவில்லை.
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்
-
வட அமெரிக்காவில் தமிழக தயாரிப்பு.. "ஆள போறான் தமிழன் உலகமெல்லாமே" பாட்டுதான் ஞாபகம் வருது!
-
இந்த பேருக்காவே கூட்டம் கூட்டமா போய் வாங்க போறாங்க... மாருதி, டாடா பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்!