Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்த சமயத்துல இதுதான்யா வேணும்... லாரி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியை தரும் உருப்படியான செய்தி!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மக்களின் அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையில்லாமல் வழங்கி வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லாரி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.
கொரோனா தனது கோர முகத்தை காட்டு வரும் இவ்வேளையில், இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனையடுத்து, வரும் மே 3ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் பெரும் நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்யும் பெரும் பொறுப்பு அரசாங்கம் வசம் இருக்கிறது.
இதனால், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டுடன் போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் வாய்ப்பையும் பொருட்படுத்தாமல், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் ஆகச் சிறந்த பணியை செய்யும் பொறுப்பை லாரி ஓட்டுனர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பல்வேறு சிரமங்களை கடந்து சரக்கு போக்குவரத்துப் பணியில் லாரி ஓட்டுனர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மாநிலங்களுக்கு இடையே மளிகை பொருட்கள், காய்கறி இவற்றை தினசரி சப்ளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சில டிரக்குகள் பல மாநிலங்களை கடந்து செல்லும் நிலை இருக்கிறது. இந்த தருணத்தில் அனைத்து மாநிலங்களிலுமே உணவகங்கள் மூடப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. சில ஓட்டுனர்கள் டிரக்கிலேயே சமைத்து சாப்பிடும் வசதி இருந்தாலும், இப்போதைய சூழலில் குறித்த நேரத்தில் சரக்குகளை கொண்டு சேர்க்கும் கட்டாயத்தில் அவர்களுக்கு சமையலுக்கான நேரம் போதிய அளவு இல்லை.
எனவே, உணவகங்கள் இல்லாததாால், அவர்களுக்கு குறித்த நேரத்தில் உணவு கிடைப்பது பெரும் சிக்கலாக அமைந்துவிட்டது. இதனை கருத்தில்கொண்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் சில தாபாக்களை செயல்பட அரசு அனுமதித்தது தெரிந்ததே. ஆனால், இதுவும் போதாது என்ற நிலை இருப்பதுடன், அதனை புதிய ஓட்டுனர்கள் கண்டுகொள்வதில் சிக்கல் இருக்கிறது.
எனவே, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் உணவு கிடைப்பதற்கான வசதியை ஐஓசி, பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களும் ஏற்படுத்தி உள்ளன. முதல்கட்டமாக 1,700 பெட்ரோல் நிலையங்களில் ஓட்டுனர்களுக்கு உணவு கிடைக்கும் வசதியை வழங்கப்படும்.
எந்தெந்த பெட்ரோல் நிலையங்களில் உணவு கிடைக்கும் என்பது குறித்த பட்டியலை எண்ணெய் நிறுவனங்கள் தயார் செய்து மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் அளித்தன. அந்த பட்டியல் தற்போது மத்திய நெடுஞ்சாலை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் நிலையங்கள் மட்டுமல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகளில் உணவு விற்பனை செய்யும் தாபா உணவகங்கள் விபரம், வாகன பழுது நீக்கும் கடைகள் குறித்த விபரமும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. அந்த கடையின் முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல்போன் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது நடுவழியில் வாகன ரிப்பேர் உள்ளிட்ட விஷயங்களால் ஓட்டுனர்கள் அவதிப்படுவதை தவிர்க்க பெரும் உதவியாக அமையும். தற்போது 1,700 பெட்ரோல் நிலையங்களில் உணவு கிடைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் உணவு கிடைப்பதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!