Just In
- 3 min ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 3 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 4 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 6 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
Don't Miss!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அக்.1 முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி.புக், ஓட்டுனர் உரிமம்: புதிய நடைமுறை அறிமுகமாகிறது
வரும் 1ந் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மோட்டார் வாகன விதிகளிலும், காலத்திற்கு தக்கவாறு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தொடர்ந்து, அதே பாணியில் பல்வேறு அரசு சார்ந்த பயன்பாட்டு அட்டைகளை ஒரே மாதிரியாக வழங்குவதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலமாக, மாநிலங்களுக்கு இடையே பணி, தொழில் சார்ந்து அல்லது குடிபெயர்ந்து செல்வோருக்கு ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் தவிர்க்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
அந்த வகையில், நவீன மின்னணு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, 1989ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதன்படி, நாடுமுழுவதும் வாகனங்களுக்கு ஒரே மாதிரியான பதிவு அட்டை மற்றும் வாகன ஓட்டிகளுக்கான உரிமத்தை வழங்கும் புதிய நடைமுறை வரும் 1ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
இனி ஆர்.சி.புக் என்பது மின்னணு அட்டை வடிவில் வழங்கப்படும். அதேபோன்று, ஓட்டுனர் உரிமமும் மின்னணு அட்டை வடிவிற்கு மாறுகிறது. இந்த ஓட்டுனர் உரிம அட்டையில் QR Code மற்றும் Micro Chip ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கும்.
வாகன ஓட்டிகள் செலுத்தி அபாரதம் மற்றும் தண்டனை விபரங்களை எளிதாக இந்த அட்டையை வைத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகனத் துறையினர் கண்டறிந்துவிடலாம். 10 ஆண்டுகள் வரையிலான தண்டனை விபரங்களை இந்த புதிய மின்னணு அட்டையை பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும்.
அதேபோன்று, வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விபரங்கள் அனைத்தும் மின்னணு முறைக்கு மாற்றப்பட உள்ளது. அதேநேரத்தில், தற்போது பயன்பாட்டில் உள்ள ஆர்.சி. புத்தகம் அல்லது வாகனப் பதிவு அட்டையை புதுப்பிக்க வேண்டுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், பெட்ரோல் நிலையங்களில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தினால் பரிவர்த்தனை கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. வரும் அக்டோபர் 1 முதல் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவோருக்கு இந்த சலுகை ரத்து செய்யப்படுகிறது. ஆனால், டெபிட் கார்டு மூலமாக செலுத்துவோருக்கு பரிவர்த்தனை கட்டணச் சலுகை தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!