Just In
- 48 min ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 49 min ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 1 hr ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அப்போ வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு வாய்ப்பு இல்லைன்னு சொல்லுங்க?
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. இது வாகன நிறுவனங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது.
கொரோனா பிரச்னையால் வாகன உற்பத்தி மற்றும் விற்பனைத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வாகன நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.
மேலும், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி மிக அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வாகன நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், இதனை மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.
இந்த சூழலில், இந்தியாவில் வாகனங்களுக்கான வரி விதிப்பு மிக அதிகமாக இருப்பதால், முதலீடுகளை நிறுத்தி வைக்கப் போவதாக டொயோட்டா கார் நிறுவனத்தின் தலைவர் ஷேகர் விஸ்வநாதன் கூறியதாக வெளியானச் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இது அரசியல் ரீதியில் சென்றதால், டொயோட்டா உடனடியாக மறுப்பு அறிக்கையும் வெளியிட்டது. இந்த சூழலில், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற வாகன நிறுவனங்களின் கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் வரி விதிப்பு முறையில் பெரிய உயர்வு இல்லை. மேலும், வாட் வரியை ஒப்பிடும்போது, ஜிஎஸ்டி வரி குறைவாகத்தான் உள்ளது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரிக்கை வைப்பதைவிட, வாகன நிறுவனங்கள் தங்களது உற்பத்தி செலவீனத்தை குறைத்து, விற்பனையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.
அதேபோன்று, தங்களது தாய் நிறுவனமாக செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இங்குள்ள வாகன நிறுவனங்கள் தரும் ராயல்டி தொகையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி இருப்பதாக தெரிகிறது.
இதனால், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. ஏற்கனவே மிக மோசமான நிலையில் இந்த இந்திய வாகன சந்தை, கொரோனா பிரச்னையால் பெரிய அடியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்தால், விற்பனை அதிகரித்து தங்களது பொருளாதார பாதிப்பை சரிசெய்ய வழிபிறக்கும் என்று வாகன நிறுவனங்கள் காத்திருந்தன. ஆனால், மத்திய அரசு வழங்கி இருக்கும் அறிவுரை வாகன நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!