Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 2 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 3 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 4 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Movies கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விற்பனையாகாத பிஎஸ்4 கார்கள்... ரூ.125 கோடியை நஷ்ட கணக்கில் எழுதிய மாருதி சுஸுகி!
விற்பனையாகாத பிஎஸ்-4 கார்களின் மதிப்பை நஷ்ட கணக்கில் எழுதி உள்ளது மாருதி சுஸுகி நிறுவனம். இதன் மதிப்பு ரூ.125 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சூழலில், கொரோனா நெருக்கடி காரணமாக, காலக்கெடு நெருங்கியபோது பிஎஸ்4 கார்களை விற்க முடியாத நிலை தயாரிப்பாளர்களுக்கும், டீலர்களுக்கும் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் உச்சநீதிமன்றத்தை அணுகியது. இருப்பில் தேங்கிய பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், டீலர்களும், தயாரிப்பாளர்களுக்கும் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் தெரிவித்தது.
இதனை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை மீண்டும் சுட்டிக் காட்டியது. மேலும், லாக் டவுன் முடிந்த பின்னர் 10 நாட்களில் இருப்பில் இருக்கும் 10 சதவீத பிஎஸ்4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யலாம் என்று அனுமதித்தது.
இந்த நிலையில், கொரோனா பிரச்னை அதிகரித்ததால், லாக் டவுன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. வரும் 31ந் தேதி வரை லாக் டவுன் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தற்போது கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் டீலர்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த சூழலில், வரும் 31ந் தேதிக்கு பின்னர் லாக் டவுன் நீக்கப்பட்டால், இருப்பில் தேங்கி இருக்கும் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அது சந்தேகத்திற்கு இடமானதாகவே இருக்கிறது.
இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தனது ஆலைகளில் உள்ள யார்டுகளிலும், டீலர்களிலும் இருப்பில் தேங்கி இருக்கும் பிஎஸ்4 வாகனங்களை நஷ்ட கணக்கில் எழுதி உள்ளது. இதன் மதிப்பு ரூ.125 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, பிஎஸ்4 வாகனங்களை டீலர்கள் தங்களது பெயரில் பதிவு செய்து பயன்படுத்தப்பட்ட வாகனங்களாக விற்பனை செய்யலாம் என்று யோசனை வழங்கி இருந்தது. அத்துடன், தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் டீலர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், வேறு வழி இல்லை எனில், அரசு விதிகளின்படி அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான எஞ்சினுடன் கார்களை அறிமுகம் செய்வதில் மாருதி முன்னோடியாக மாறியது. கடந்த ஆண்டு முதலே பிஎஸ்6 கார்களை அறிமுகம் செய்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதியுடன் பிஎஸ்4 கார்கள் உற்பத்தியை நிறுத்துவதாகவும் அறிவித்தது. இதனிடையே, டீசல் மாடல்கள் விற்பனையையும் மாருதி நிறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!