Just In
- 8 min ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 56 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 1 hr ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 2 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு செய்த போலீஸ்.. கடுப்பான கார் ஓனர் என்ன செய்தார் தெரியுமா... ?
பறிமுதல் செய்த காரில் ஜாலி ரைடு வந்த போலீஸ்காரர்களை அக்காரின் உரிமையாளர் விசித்திரமான முறையில் பழி வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார், பணியின்போது ஏதேனும் வாகனம் சட்டத்திற்கு புரம்பாக இயக்கப்படுவதை அறிவார்களானால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதோடு, சிறைகாவலிலும் எடுப்பார்கள்.
பொதுவாக கடத்தல், வன்முறை, திருட்டு, முறையான சான்றுகள் இல்லாதது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்கள் மீதே போலீஸார் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.
அவ்வாறு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை காவல்நிலையம் எடுத்துச் சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, வாகனத்திற்கான முறையான ஆவணங்கள் வழங்கப்படுமேயானால் அந்த வாகனம் அதன் உரிமைாயளர்களிடமே ஒப்படைக்கப்படும்.
ஆனால், இங்கு ஓர் முற்றிலும் வித்தியாசமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார் சிலர் அந்த சொகுசு காரிலேயே ஜாலி ரைடு உல்லாசமாக சுற்றித் திருந்துள்ளனர்.
இதையறிந்த சொகுசு காரின் உரிமையாளர், தனக்கு தெரியாமல் தன்னுடைய விலையுயர்ந்த காரைப் பயன்படுத்திய போலீஸார்களை முற்றிலும் வித்தியாசமான முறையில் பழி வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஹிந்துஸ்தான் ஆங்கில தளம் வெளியிட்டிருக்கின்றது.
பொதுவாக, இப்போது களமிறங்கும் பல வாகனங்கள் அதிக தொழில்நுட்பங்கள் அடங்கிய தயாரிப்பாக விற்பனைக்கு வருகின்றன. குறிப்பாக திருட்டை தவிர்க்கும் நோக்கில் ஜிபிஎஸ் வசதி அனைத்து தொழில்நுட்ப காரிலும் முதன்மை அம்சமாக இணைக்கப்பட்டு வருகின்றன.
இந்த அம்சம் தற்போது கார்களில் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களிலும் இயல்பான ஓர் அம்சமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இது திருட்டை தவிர்ப்பதுடன் குறிப்பிட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனத்தின் நேரடி இருப்பிடத்தைப் பற்றிய தகவலையும் வழங்கும்.
இந்த வகையிலான ஓர் காரைதான் லக்னோவில் உள்ள கோம்தி நகர் காவல்நிலைய அதிகாரிகள் குறிப்பிட்ட காரணங்களுக்காக பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த கார் 2018ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எஸ்யூவி ரக சொகுசு காராகும்.
இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த காரை போலீஸார் கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 3) அன்று பறிமுதல் செய்திருந்தனர்.
மறுநாள் (புதன்கிழமை) காரை பறிமுதல் செய்த போலீஸாருக்கு விசாரிக்க வேண்டிய வழக்கு ஒன்றிற்காக லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள நாய் பஸ்டி என்ற கிராமத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இது, போலீஸாரின் கோம்திநகர் காவல்நிலையத்தில் இருந்து 143 கிமீ தொலைவில் இருக்கின்றது.
இந்த இடத்திற்கு அரசின் அதிகாரப்பூர்வமான வாகனத்தைப் பயன்படுத்தாமல் முந்தைய நாள் பறிமுதல் செய்த சொகுசு காரை பயன்படுத்த போலீஸார் திட்டமிட்டனர்.
அதன்படி, கோம்தி நகர் காவல்நிலைய துணை ஆய்வாளர் மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் அந்த காரில் புறப்பட்டனர். இந்நிலையில், சொகுசு காரின் பயன்பாட்டை ஆன்லைன் மொபைல் ஆப் மூலம் பார்வையிட்டுக் கொண்டிருந்த அக்காரின் உரிமையாளர் தன்னுடை கார் இடம்விட்டு இடம் நகர்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து, தன்னுடைய காரை பாதுகாக்க நினைத்து காரில் இருக்கும் ஸ்மார்ட் கனெக்ட் வசதியின் உதவியுடன் காரின் எஞ்ஜினை ரிமோட் மூலம் ஆஃப் செய்தார்.
இத்துடன், காரின் அனைத்து கதவுகளையும் திறக்க முடியாத வகையில் பூட்டினார். இதையனைத்தையும் மிக மிக நீண்ட இடைவெளியில் இணையத்தின் உதவியின் மூலம் சொகுசு காரின் உரிமையாளர் செய்தார். இதனால், வழக்கு விசாரணைக்காக திருட்டுத் தனமாக காரில் புறப்பட்ட காவலர்கள் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக காரில் சிக்கித் தவித்தனர்.
இதையடுத்து, அதே லக்னோ காவல் நிலையத்தில் தன்னுடைய கார் தவறாக பயன்படுத்தப்பட்டதாக காரின் உரிமையாளர் புகாரளித்தார்.
புகாரைத் தொடர்ந்து, காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாக கோம்தி நகர் காவல்நிலையத்தின் எஸ்எச்ஓ தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் காவல்துறைக்கு ஏற்பட்ட கரும்புள்ளியாக கருதுவதாக அவர் தெரிவித்தார்.
சமீப காலமாக அறிமுகம் பல்வேறு வாகனங்களில் இதுபோன்று டிராக்கிங் வசதி கொடுக்கப்பட்டு வருகின்றது. இது திருட்டு போன்ற முரண்பாடான செயல்களில் இருந்து வாகனத்தைக் காக்க மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக, உரிமையாளரின் அனுமதியின்றி ஒருவரையும் காருக்குள் இந்த தொழில்நுட்பம் அனுமதிப்பதில்லை.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!