Just In
- 32 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அஜாக்கிரதையாக செயல்பட்ட உபி எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!
கொரோனா வைரஸ் பரவல் முன்பைக் காட்டிலும் அதி வேகத்தில் பரவிக் கொண்டிருக்கின்ற வேலையில், எம்எல்ஏ ஒருவர் அவரது நண்பர்களுடன் சொகுசு காரில் மாநிலம் விட்டு மாநிலம் சென்றுள்ளார். மேலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக நபர்களுடன் அவர் சென்றுள்ளார். இந்த விதி மீறிய குற்றத்திற்காக போலீஸார் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
தேசியளவிலான ஊரடங்கு மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் விதமாக தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே வறுமை கோட்டிற்குள் தள்ளப்பட்டிருந்த அடித்தட்டு மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள், தற்போது மிகப்பெரிய பஞ்சத்தில் சிக்கியிருக்கின்றனர்.
பலரின் அத்தியாவசிய தேவைகள் கேள்விக் குறியாகவே மாறியிருக்கின்றது. இந்த நிலையிலேயே மத்திய அரசு மீண்டும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவை அமலுக்குக் கொண்டுவந்தது. அதேசமயம், புதிய ஊரடங்கு உத்தரவுடன் லேசான தளர்வுகளையும் அது வழங்கியிருக்கின்றது.
அதன்படி, குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் அதிகபட்ச கட்டுப்பாடுகளுடன் இயங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தளர்வை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாதிரியான ஓர் சம்பவம்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தை அரங்கேற்றியவர் யார் என்பதுதான் சற்றே அதிர்ச்சிக்குள்ளான தகவலாக உள்ளது
ஆம், உத்தரபிரதேச மாநிலத்தின் எம்எல்ஏ-வான அமன் மணி திரிபாதி, இவர்தான் ஊரடங்கு உத்தரவை மீறி மாநிலம் விட்டு மாநிலம் சென்றிருக்கின்றார். இந்த பயணத்திற்காக உபி மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-இன் பெயரையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
இந்த குற்றத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் அமன் மணி திரிபாதி தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மட்டுமின்றி அவருடன் மூன்று சொகுசு கார்களில் பயணித்த, அவரது நண்பர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.இதுகுறித்த தகவல் மற்றும் வீடியோவை நியூஸ் டைம்ஸ் 24 தளம் வெளியிட்டுள்ளது.
அமன் மணி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு செல்லும் வழியிலேயே போலீஸார் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். இவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு காலமான யோகி ஆதித்யநாத்தின் தந்தைக்கு விஷேச பூஜை செய்யும் விதமாகவே அக்கோவிலுக்கு செல்வதாக போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
இதற்காக, உத்தர்காண்ட் மாநிலத்தின் கூடுதல் செயலாளர் ஓம் பிரகாஷிடம் அவர்கள் சிறப்பு அனுமதி பெற்றிருக்கின்றார். இந்த அனுமதியில், ஒவ்வொரு காரிலும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் மூன்று பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை மீறிய அமன் மணி, சமூக இடைவெளி இல்லாமல் ஒவ்வொரு காரிலும் நான்கு பேர் என கூடுதல் நபர்களுடன் அவர் பயணித்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ந்துபோன போலீஸார், சிறப்பு அனுமதியில் ஒரு காரில் தலா 3 பேர் வீதம், மொத்தம் 9பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், நீங்கள் விதியை மீறியுள்ளீர்கள் என சுட்டிக்காட்டினர். இதனால், அதிருப்தி அடைந்த அமன் மணி, நான் யார் என தெரியுமா., எனக்கு இருக்கும் பவர் என்ன தெரியுமா., என்று போலீஸாரையும் அங்கிருந்த அதிகாரிகளையும் மிரட்டத் தொடங்கியுள்ளார்.
கூடுதலாக போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவும் ஆரம்பித்துள்ளனர். இதனால், தொடர் அதிர்ச்சியைச் சந்தித்த அதிகாரிகள், அனுமதியை துஷ்பிரயோகம் செய்தது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதது, அதிகாரிகளை மிரட்டும் விதமாக செயல்பட்டது என பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில், டொயோட்டா பார்ச்சூனர், ஃபோர்டு எண்டியோவர் மற்றும் மற்றுமொரு விலையுயர்ந்த எஸ்யூவி ஆகியவை அடங்கும்.
இந்த சம்பவம்குறித்து உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம், உத்தர்காண்ட் மாநில அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், அமன் மணியின் செயல்பாட்டிற்கு கண்டனத்தையும் தெரிவித்தார்.
அமன் மணி உபி-யின் சுயேட்சை எம்எல்ஏ ஆவார். இவர், அவரது நண்பர்களுடன் ஜாலியாக ரைடு செய்வதற்காகவே பொய் காரணம் கூறி அனுமதி பெற்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அதேசமயம், இந்த குழுவினர் செல்லவிருந்ததாக கூறப்படும் கேதரிநாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இரு வழிபாட்டு தளங்களும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பூட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொதுமக்கள் வழிபாட்டிற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த திருத்தலங்கள் மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான கோவில்கள் தற்போது பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.
இருப்பினும், அமன் மணி திரிபாதி மற்றும் அவரது நண்பர்கள் இங்கு செல்வதாகவே கூறி சொகசு காரில் நான்கு மாநிலங்களைக் கடந்துச் சென்றுள்ளனர்.
தற்போது நிலவிக்கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அமன் மணியின் செயல் அம்மாநில மக்கள் மத்தியில் வறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவரது சொந்த தொகுதி மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் பொதுமக்கள் மட்டுமின்றி இதுபோன்று அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பலரும் தவறான காரணங்களைக்கூறி வெளியே சுற்றித்திரிவது வருந்த தக்க செயலாக உள்ளது.
இதனை தவிர்க்கும் விதமாகவே நாடு முழுவதும் அந்தந்த மாநில போலீஸார், தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கொரோனா வைரஸ் கூடுதலாக பரவி விடக்கூடாது என்பதில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்காக, வழக்கு பதிதல், அபராதம் விதித்தல் விநோத தண்டனை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளைப் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!