Just In
- 45 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Movies நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பால், காலவாதியாகும் வாகனப் பதிவு சான்று மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூக பரவலை தடுக்க தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு நிர்வாகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்று, பர்மிட் போன்றவற்றிற்கான காலாவதி காலம் முடிவடையும் தருவாயில் இருப்போர், புதுப்பிக்க இயலாத நிலை உள்ளது. மேலும், அத்தியாவசிய சேவைக்கான போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கும் பிரச்னை எழும் வாய்ப்பு இருக்கிறது.
இவற்றை மனதில் வைத்து வாகனப் பதிவு சான்று மற்றும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீடித்துள்ளது. அதாவது, பிப்ரவரி 1 முதல் காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றை புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், பிப்ரவரி 1ந் தேதிக்கு பிறகு ஓட்டுனர் உரிமம் அல்லது வாகனப் பதிவுச் சான்று காலாவதி ஆனாலும், அந்த வாகனங்களை அனுமதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை மற்றும் வட்டார அலுவலகப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. குறிப்பாக, அத்திவாசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் தடங்கல் இல்லாமல் செல்வதற்கு இந்த அறிவிப்பு உதவும்.
இந்த புதிய அறிவிப்பு மூலமாக சரக்கு வாகனங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதில் தங்கு தடை ஏற்படாது என்றும் மத்திய அரசு கருதுகிறது. மேலும், ஓட்டுனர் உரிமம் மேற்குறிப்பிட்ட காலத்தில் காலவாதியானாலும் கவலை கொள்ள தேவையில்லை.
இது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும் என்பதுடன், தேவையற்ற குழப்பங்கள் மற்றும் தடங்கல்களை வாகன ஓட்டிகள் சந்திக்கும் நிலை தவிர்க்கப்படும். காவல் துறை, போக்குவரத்து துறைக்கும் சரியான வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!