Just In
- 51 min ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 2 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 7 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பால், காலவாதியாகும் வாகனப் பதிவு சான்று மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூக பரவலை தடுக்க தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு நிர்வாகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்று, பர்மிட் போன்றவற்றிற்கான காலாவதி காலம் முடிவடையும் தருவாயில் இருப்போர், புதுப்பிக்க இயலாத நிலை உள்ளது. மேலும், அத்தியாவசிய சேவைக்கான போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கும் பிரச்னை எழும் வாய்ப்பு இருக்கிறது.
இவற்றை மனதில் வைத்து வாகனப் பதிவு சான்று மற்றும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீடித்துள்ளது. அதாவது, பிப்ரவரி 1 முதல் காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றை புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், பிப்ரவரி 1ந் தேதிக்கு பிறகு ஓட்டுனர் உரிமம் அல்லது வாகனப் பதிவுச் சான்று காலாவதி ஆனாலும், அந்த வாகனங்களை அனுமதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை மற்றும் வட்டார அலுவலகப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. குறிப்பாக, அத்திவாசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் தடங்கல் இல்லாமல் செல்வதற்கு இந்த அறிவிப்பு உதவும்.
இந்த புதிய அறிவிப்பு மூலமாக சரக்கு வாகனங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதில் தங்கு தடை ஏற்படாது என்றும் மத்திய அரசு கருதுகிறது. மேலும், ஓட்டுனர் உரிமம் மேற்குறிப்பிட்ட காலத்தில் காலவாதியானாலும் கவலை கொள்ள தேவையில்லை.
இது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும் என்பதுடன், தேவையற்ற குழப்பங்கள் மற்றும் தடங்கல்களை வாகன ஓட்டிகள் சந்திக்கும் நிலை தவிர்க்கப்படும். காவல் துறை, போக்குவரத்து துறைக்கும் சரியான வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
சாம்பார், ரசம்னு வித விதமா சமைச்சே தம்பி சூப்பரான காரை வாங்கிட்டாரு!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!