Just In
- 10 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 14 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஆர்சி, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பால், காலவாதியாகும் வாகனப் பதிவு சான்று மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சமூக பரவலை தடுக்க தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசு நிர்வாகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்று, பர்மிட் போன்றவற்றிற்கான காலாவதி காலம் முடிவடையும் தருவாயில் இருப்போர், புதுப்பிக்க இயலாத நிலை உள்ளது. மேலும், அத்தியாவசிய சேவைக்கான போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கும் பிரச்னை எழும் வாய்ப்பு இருக்கிறது.
இவற்றை மனதில் வைத்து வாகனப் பதிவு சான்று மற்றும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீடித்துள்ளது. அதாவது, பிப்ரவரி 1 முதல் காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றை புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், பிப்ரவரி 1ந் தேதிக்கு பிறகு ஓட்டுனர் உரிமம் அல்லது வாகனப் பதிவுச் சான்று காலாவதி ஆனாலும், அந்த வாகனங்களை அனுமதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை மற்றும் வட்டார அலுவலகப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. குறிப்பாக, அத்திவாசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் தடங்கல் இல்லாமல் செல்வதற்கு இந்த அறிவிப்பு உதவும்.
இந்த புதிய அறிவிப்பு மூலமாக சரக்கு வாகனங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதில் தங்கு தடை ஏற்படாது என்றும் மத்திய அரசு கருதுகிறது. மேலும், ஓட்டுனர் உரிமம் மேற்குறிப்பிட்ட காலத்தில் காலவாதியானாலும் கவலை கொள்ள தேவையில்லை.
இது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும் என்பதுடன், தேவையற்ற குழப்பங்கள் மற்றும் தடங்கல்களை வாகன ஓட்டிகள் சந்திக்கும் நிலை தவிர்க்கப்படும். காவல் துறை, போக்குவரத்து துறைக்கும் சரியான வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!