Just In
- 1 hr ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 2 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 4 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 9 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
Don't Miss!
- News ஏழை பெண்களுக்கு ரூ1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50%-இன்று வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Movies ஜெயமோகன் அப்படி பேசியிருக்கக்கூடாது.. மஞ்சும்மல் பாய்ஸுக்காக களமிறங்கிய பாக்யராஜ்
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
நாட்டிலேயே கடைசி மாநிலமாக மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமிழகம்! டாக்ஸி டிரைவர்கள் ஹேப்பி
மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்திய திட்டத்தை தமிழக அரசு தற்போது நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாடு முழுவதும் நிலவும் மிகப்பெரிய சிக்கல்களில் முக்கியமான ஒன்றாக வாகன புகையால் உருவாகும் மாசு இருக்கின்றது. இதனைக் கட்டுபடுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கின்ற முயற்சிகள் அண்மைக் காலங்களாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவை சுற்றுப்புறச் சூழலுக்கு துளியளவும் தீங்கு விளைவிக்காது. மின்வாகன விற்பனையை ஊக்குவித்து வரும் அரசு, மறுபுறம் குறைந்த மாசினை வெளிப்படுத்தும் சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. இவை தற்போது விற்பனையில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் மிகக் குறைந்தளவு மாசையே உமிழும்.
ஆகையால், பெட்ரோல் பங்குகளுக்கு இணையான சிஎன்ஜி மற்றும் எல்பிஜி மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அதகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுமட்டுமின்றி, தற்போது நடைமுறையில் இருக்கும் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்தை அப்கிரேட் செய்து பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக உயர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் வருகின்ற ஏப்ரலம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கின்றது. இவ்வாறு, எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரை அரசு தொடுத்து வருகின்றது. அதேசமயம், பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு ஆப்பு வைக்கின்ற வகையிலான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகின்றது.
அந்தவகையில், பழைய வாகனங்களை அதாவது பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய பழைய வாகனங்களை, தரச்சான்றை (எஃப்சி) வைத்து பயன்பாட்டில் இருந்து நீக்கும் முயற்சிகள் களமிறங்கியுள்ளது.
இதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு சில சீர்த்திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. தொடர்ந்து, பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் வாகனங்களின் பதிவை ரத்து செய்து, அதை ஸ்கிராப் செய்யவும் அரசு திட்டமிட்டு வருகின்றது. இதற்கான முயற்சிகள் அதிதீவிரமாகவே செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் சீர்திருத்தத்தை தமிழக அரசு தற்போதே நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
ஆகையால், வணிக ரீதியாக இயங்கும் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை எஃப்சி (தரச்சான்று) வாங்க வேண்டுமென்று இருந்த நடைமுறை, தற்போது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வாங்கினாலே போதும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வணிக ரீதியாக இயங்கும் எட்டு வயதுடைய வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். 8 ஆண்டுகளைக் கடந்த வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை எஃப்சி சான்று பெற வேண்டும்.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த பிப்ரவரி 13ம் தேதி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, இந்த மாற்றத்தை வாஹன் இணையதளத்தில் மாற்றும்படி என்ஐசிக்கு மாநில போக்குவரத்து ஆணையர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை வாடகை வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், வாகனத்துறை வல்லுநர்கள் இது காலம் தாழ்ந்த நடவடிக்கை எடுக்கும் என்றும், கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில் உள்ள சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் குறைந்தது ஆண்டு ஒன்றிற்கு 75கிமீட்டர்கள் முதல் 1 லட்சம் கிமீ வரை பயணிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் தரச்சான்றை இரண்டாண்டிற்கு ஒரு முறையென மாற்றும்போது வாகன உரிமைதாரர்கள் அலட்சியப்போக்குடன் வாகனங்களை பராமரிப்பார்கள். இது விபத்து போன்ற பின்விளைவுகளை அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் எஃப்சி செய்வதால் கிடைக்கும் லாபத்தில் சரிபாதி எஃப்சி செய்வதற்கே செலவாகிவிடுகின்றது. ஆகையால், தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த சீர்திருத்தம் வாடகை வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
தமிழக நடைமுறைப்படுத்தியிருக்கும் இத்திட்டத்தை மற்ற அனைத்து மாநலங்களும் எப்போதோ நிறைவேற்றிவிட்டன. ஆனால், தமிழக அரசோ தற்போது இந்த மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கின்றன. ஆகையால், இத்திட்டத்தை கடைசியாக நடைமுறைக்கு கொண்டு வந்த மாநிலம் தமிழகம் என கூறப்படுகின்றது.
-
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!
-
நிறைய பேரு இப்பவே காண்டாக ஆரம்பிச்சுட்டாங்க.. ஹோண்டா இப்படி ஒரு வேலையை செய்ய போகுதா!! எப்படிதான் மனசு வருதோ!