Just In
- 42 min ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 1 hr ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 3 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 9 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
Don't Miss!
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- News வண்டலூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி டிரைவருடன் அதிரடியாக கைது.. திமுக நிர்வாகி கொலையில் திடுக் தகவல்
- Finance 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Movies விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க மறுத்த நடிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு!
கடுமையான மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள நிலையில், டீசல் கார்கள் விற்பனை குறித்த முக்கிய முடிவை ஃபோக்ஸ்வேகன் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் கார் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 எஞ்சினுடன் கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. மேலும், பெட்ரோல் விலையை நெருங்கும் அளவுக்கு டீசல் விலையும் உயர்ந்துவிட்டது.
இதுதவிர்த்து, எதிர்காலத்தில் மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக, டீசல் கார்கள் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதனால், டீசல் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது.
இவற்றை மனதில் வைத்து, பெரும்பாலான கார் நிறுவனங்கள் டீசல் கார் மாடல்களின் உற்பத்தியை அடியோடு நிறுத்திவிட்டது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் டீசல் கார் விற்பனைக்கு முற்றிலுமாக முழுக்கு போடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
தற்போது டீசல் கார்களுக்கு இணையான அனுபவத்தை தரும் வகையில், டர்போசார்ஜருடன் இயங்கும் தனது டிஎஸ்ஐ வகை பெட்ரோல் எஞ்சின்களுடன் கார்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் டீசல் கார் அறிமுகம் குறித்த திட்டம் எதையும் அந்நிறுவனம் வகுக்கவில்லை.
ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ, டி ராக், டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஆகிய கார்கள் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வழங்கப்படும். டீசல் எஞ்சின் தேர்வுகளில் இனி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி கூறுகிறது.
மேலும், எஸ்யூவி கார் மாடல்களை களமிறக்குவதில் அதிக கவனம் செலுத்தவும் ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்று கருதுகிறது.