Just In
- 15 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 45 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Movies Pandian stores 2: கல்யாண வைபோகத்தில் பங்கேற்ற பாண்டியன் குடும்பத்தினர்.. பதற்றத்தில் சரவணன்!
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சூப்பரான எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ!
இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு களமிறக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து வால்வோ நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் கோனா மற்றும் இந்த ஆண்டு துவக்கத்தில் வந்த எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து, எலெக்ட்ரிக் கார் சந்தையில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து அனைத்து கார் நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன. அந்த வகையில், சொகுசு கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் வால்வோ கார் நிறுவனமும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலித்து வருகிறது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி பெரும் வரவேற்பை பெற்றது. அட்டகாசமான டிசைன், சிறப்பம்சங்கள், கவர்ச்சிகரமான விலை ஆகியவை இந்த எஸ்யூவிக்கு சிறப்பான தொடக்கத்தை இந்தியாவில் வழங்கியது.
இந்த நிலையில், எக்ஸ்சி40 எஸ்யூவியின் மின்சார வெர்ஷனையும் வால்வோ உருவாக்கி இருக்கிறது. இந்த மின்சார மாடலையும் இந்தியாவில் கொண்டு வருவதற்கான திட்டத்தை வால்வோ பரிசீலித்து வருவதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மின்சார எஸ்யூவியில் 150kW மின் மோட்டார்கள் இரண்டு ஆக்சில்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் மோடடார்கள் அதிகபட்சமாக 402 பிஎச்பி பவரையும், 659 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த மின்சார கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.9 வினாடிகளில் எட்டிவிடும். அதாவது, பெட்ரோல், டீசல் எஸ்யூவிகளைவிட மிகச் சிறப்பான செயல்திறனை இந்த மின்சார எஸ்யூவி வழங்கும் என்பதால், வாடிக்கையாளர் மத்தியிலும் ஆவல் எழுந்துள்ளது.
இந்த எஸ்யூவியில் 78kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 400 கிமீ தூரம் வரை செல்வதற்கான வாய்ப்பை வழங்கும். இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், வெறும் 40 நிமிடங்களில் 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டுவிடலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர், ஆடி என அனைத்து சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளன. அதில், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கும் என்று நம்பலாம்.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!