Just In
- 2 min ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 1 hr ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 4 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 6 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு?
தானியங்கி வாலட் பார்க்கிங் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் அதன் தொழில்நுட்ப கூட்டாளியான போஷ் உடன் இணைந்து புரட்சிகர வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றது. அந்தவகையில், இவ்விரு நிறுவனங்களும் இணைந்து வாகனங்களுக்கான புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்த தொழில்நுட்பம் கார்களை தானாகவே வாலட் பார்க்கிங் செய்ய உதவும்.
இதற்காக அப்கோவா எனும் பார்க்கிங் ஆபரேட்டருடன் பென்ஸ்-போஷ் கூட்டணி வைத்திருக்கின்றது. இந்த நிறுவனங்கள் இணைந்தே மெர்சிடிஸ் பென்ஸ் காரை தானாக பார்க்கிங் செய்யும் தொழில்நுட்பத்தை பார்க்கிங் ஏரியாவில் நிறுவ இருக்கின்றன.
முதல்கட்டமாக ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கர்ட் விமான நிலையத்தில் இந்த தானியங்கி பார்க்கிங் வாலட் நிறுவப்பட இருக்கின்றன. கட்டண திட்டத்தின் அடிப்படையில் இந்த சேவை விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, தானியங்கி வாலட் பார்க்கிங் எப்படி செயல்படும் என்பதை விளக்கும் வீடியோவை பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தானியங்கி பார்க்கிங் செயல்பாட்டிற்காக பென்ஸ் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த கார்களில் ஒன்றான எஸ்-கிளாஸ் செடானைப் பயன்படுத்தியுள்ளது. விரைவில் புதிய எஸ்-கிளாஸ் ரக கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத் தேர்வின் அடிப்படையில் 'இன்டலிஜென்ட் பார்க் பைலட்' தொழில்நுட்பம் வசதி வழங்கப்பட இருக்கின்றது. இது தானியங்கி வாலட் பார்க்கிங்கிற்கு உதவியாக இருக்கும்.
அதாவது, இந்த தொழில்நுட்பம் செல்போன் வாயிலாக கட்டளைகளை ஏற்க உதவும். மிகத் துள்ளியமாகக் கூற வேண்டுமானால், செல்போன் மென்பொருளைக் கொண்டு காரைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறுக் கட்டுப்படுத்தப்படும் கார், தானியங்கி வாலட் பார்க்கிங்கில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தானாகவே காரைக் கொண்டு போய் சேர்க்கும்.
இந்த சேவைக்கான கட்டணம், செயல்முறை பற்றிய சோதனைகளை அப்கோவா தற்போது மேற்கொண்டு வருகின்றது. இதன், டிஜிட்டல் மொபிலிட்டி பிளாட்பாரத்தின் வாயிலாகவே மெர்சிடிஸ் பென்ஸ் இந்த தானியங்கி வாலட் பார்க்கிங் சேவையை வழங்க இருக்கின்றது.
இந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது?
கேமிராக்களின் பார்வையின் அடிப்படையில் இந்த தொழில்நுட்பம் இயங்க இருக்கின்றது. அதாவது, கேமிராவில் பதிவாகும் காட்சிகள் லோக்கல் சேவையகத்திற்கு (சர்வருக்கு) அனுப்பி வைக்கப்படும். அது, தடை மற்றும் காலியிடம் ஆகியவற்றைக் கண்டறிந்து கார் செல்ல வேண்டிய வழித் தடத்தை காண்பிக்கும்.
இந்த செயல் மிக அதிக வேகத்தில் நடைபெறும் என்பதால் எந்தவொரு தங்கு தடையுமின்றி கார் தொடர்ச்சியாக நகர்ந்துக் கொண்டே இருக்கும். முன்னதாக இதுபோன்ற செயலுக்கு லிடார் (Light Detection and Ranging) எனும் தொழில்நுட்பத்தையே போஷ் பயன்படுத்தி வந்தது. ஆனால், இதனை தற்போது போஷ் தவிர்த்துள்ளது. இதற்கு பதிலாகவே கேமிராக்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.
தானியங்கி வாலட் பார்க்கிங்கிற்கென தனியிடம் ஒதுக்கப்படும். அது லோக்கல் சர்வர்களில் தானாகவே பதிவுச் செய்யப்படும். எனவே, தானியங்கி வாலட் பார்க்கிங்கைப் பயன்படுத்த நினைக்கும் நபர், செல்போன் செயலி வாயிலாக சில செயல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு, அனுமதி வழங்கிய பின்னர் தானியங்கி வாலட் பார்க்கிங் சர்வர், ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடத்தில் காலியிடம் இருக்கிறதா என ஆராயும்.
அவ்வாறு, காலியிடம் இருப்பின், அந்த இடத்திற்கு வாகனத்தை நகர்த்திச் செல்லும். இதற்கு ஓட்டுநர் தேவையில்லை. 'இன்டலிஜென்ட் பார்க் பைலட்' தொழில்நுட்ப வசதி இருந்தால் போதும். இதைக் கொண்டு காரை தானாக கன்ட்ரோல் செய்து, உரிய பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்தும். வெற்றிகரமாக கார் நிறுத்தப்பட்ட பின், இதுகுறித்த தகவல் நோடிஃபிகேஷன் வாயிலாக உரிமைாயளருக்கு சென்று சேரும்.
பின்னர், அதன் உரிமையாளர் எந்த இடத்தில் இறங்கினாரோ, அதே இடத்தில் வந்து நின்ற பின்னர், அவர் காத்திருப்பது குறித்த தகவலையும் லோக்கல் சர்வர்கள் வாயிலாக காருக்கு அனுப்பப்படும். இதையடுத்து, உரிமையாளரை எங்கு விட்டுச் சென்றதோ அந்த இடத்திற்கு கார் நகர்ந்து வந்து அவரைப் பிக் செய்யும். இந்த சிறப்பு வசதியையே அப்கோவா நிறுவனத்துடன் இணைந்து பென்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. இதுபோன்று வாலட் பார்க்கிங் தானியங்கி வசதி அறிமுகமாவது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.
-
காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!