Just In
- 19 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வாகன உலகின் அடுத்த புரட்சி... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தானியங்கி வாலட் பார்க்கிங்... எங்கு?
தானியங்கி வாலட் பார்க்கிங் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் அதன் தொழில்நுட்ப கூட்டாளியான போஷ் உடன் இணைந்து புரட்சிகர வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றது. அந்தவகையில், இவ்விரு நிறுவனங்களும் இணைந்து வாகனங்களுக்கான புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்த தொழில்நுட்பம் கார்களை தானாகவே வாலட் பார்க்கிங் செய்ய உதவும்.
இதற்காக அப்கோவா எனும் பார்க்கிங் ஆபரேட்டருடன் பென்ஸ்-போஷ் கூட்டணி வைத்திருக்கின்றது. இந்த நிறுவனங்கள் இணைந்தே மெர்சிடிஸ் பென்ஸ் காரை தானாக பார்க்கிங் செய்யும் தொழில்நுட்பத்தை பார்க்கிங் ஏரியாவில் நிறுவ இருக்கின்றன.
முதல்கட்டமாக ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கர்ட் விமான நிலையத்தில் இந்த தானியங்கி பார்க்கிங் வாலட் நிறுவப்பட இருக்கின்றன. கட்டண திட்டத்தின் அடிப்படையில் இந்த சேவை விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, தானியங்கி வாலட் பார்க்கிங் எப்படி செயல்படும் என்பதை விளக்கும் வீடியோவை பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தானியங்கி பார்க்கிங் செயல்பாட்டிற்காக பென்ஸ் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த கார்களில் ஒன்றான எஸ்-கிளாஸ் செடானைப் பயன்படுத்தியுள்ளது. விரைவில் புதிய எஸ்-கிளாஸ் ரக கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத் தேர்வின் அடிப்படையில் 'இன்டலிஜென்ட் பார்க் பைலட்' தொழில்நுட்பம் வசதி வழங்கப்பட இருக்கின்றது. இது தானியங்கி வாலட் பார்க்கிங்கிற்கு உதவியாக இருக்கும்.
அதாவது, இந்த தொழில்நுட்பம் செல்போன் வாயிலாக கட்டளைகளை ஏற்க உதவும். மிகத் துள்ளியமாகக் கூற வேண்டுமானால், செல்போன் மென்பொருளைக் கொண்டு காரைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வாறுக் கட்டுப்படுத்தப்படும் கார், தானியங்கி வாலட் பார்க்கிங்கில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தானாகவே காரைக் கொண்டு போய் சேர்க்கும்.
இந்த சேவைக்கான கட்டணம், செயல்முறை பற்றிய சோதனைகளை அப்கோவா தற்போது மேற்கொண்டு வருகின்றது. இதன், டிஜிட்டல் மொபிலிட்டி பிளாட்பாரத்தின் வாயிலாகவே மெர்சிடிஸ் பென்ஸ் இந்த தானியங்கி வாலட் பார்க்கிங் சேவையை வழங்க இருக்கின்றது.
இந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது?
கேமிராக்களின் பார்வையின் அடிப்படையில் இந்த தொழில்நுட்பம் இயங்க இருக்கின்றது. அதாவது, கேமிராவில் பதிவாகும் காட்சிகள் லோக்கல் சேவையகத்திற்கு (சர்வருக்கு) அனுப்பி வைக்கப்படும். அது, தடை மற்றும் காலியிடம் ஆகியவற்றைக் கண்டறிந்து கார் செல்ல வேண்டிய வழித் தடத்தை காண்பிக்கும்.
இந்த செயல் மிக அதிக வேகத்தில் நடைபெறும் என்பதால் எந்தவொரு தங்கு தடையுமின்றி கார் தொடர்ச்சியாக நகர்ந்துக் கொண்டே இருக்கும். முன்னதாக இதுபோன்ற செயலுக்கு லிடார் (Light Detection and Ranging) எனும் தொழில்நுட்பத்தையே போஷ் பயன்படுத்தி வந்தது. ஆனால், இதனை தற்போது போஷ் தவிர்த்துள்ளது. இதற்கு பதிலாகவே கேமிராக்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.
தானியங்கி வாலட் பார்க்கிங்கிற்கென தனியிடம் ஒதுக்கப்படும். அது லோக்கல் சர்வர்களில் தானாகவே பதிவுச் செய்யப்படும். எனவே, தானியங்கி வாலட் பார்க்கிங்கைப் பயன்படுத்த நினைக்கும் நபர், செல்போன் செயலி வாயிலாக சில செயல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு, அனுமதி வழங்கிய பின்னர் தானியங்கி வாலட் பார்க்கிங் சர்வர், ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடத்தில் காலியிடம் இருக்கிறதா என ஆராயும்.
அவ்வாறு, காலியிடம் இருப்பின், அந்த இடத்திற்கு வாகனத்தை நகர்த்திச் செல்லும். இதற்கு ஓட்டுநர் தேவையில்லை. 'இன்டலிஜென்ட் பார்க் பைலட்' தொழில்நுட்ப வசதி இருந்தால் போதும். இதைக் கொண்டு காரை தானாக கன்ட்ரோல் செய்து, உரிய பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்தும். வெற்றிகரமாக கார் நிறுத்தப்பட்ட பின், இதுகுறித்த தகவல் நோடிஃபிகேஷன் வாயிலாக உரிமைாயளருக்கு சென்று சேரும்.
பின்னர், அதன் உரிமையாளர் எந்த இடத்தில் இறங்கினாரோ, அதே இடத்தில் வந்து நின்ற பின்னர், அவர் காத்திருப்பது குறித்த தகவலையும் லோக்கல் சர்வர்கள் வாயிலாக காருக்கு அனுப்பப்படும். இதையடுத்து, உரிமையாளரை எங்கு விட்டுச் சென்றதோ அந்த இடத்திற்கு கார் நகர்ந்து வந்து அவரைப் பிக் செய்யும். இந்த சிறப்பு வசதியையே அப்கோவா நிறுவனத்துடன் இணைந்து பென்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. இதுபோன்று வாலட் பார்க்கிங் தானியங்கி வசதி அறிமுகமாவது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?