Just In
- 20 min ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 5 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 5 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 6 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அரசுக்கு சொந்தமான வாகனங்களில் நடைபெறப்போகும் அதிரடி மாற்றம்... சூப்பரான செய்தியை சொன்ன துணை முதல்வர்...
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் புதிய தகவல்களை கூறியுள்ளார். அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான வாகனங்களில் 50 சதவீத வாகனங்கள், அடுத்த 2-3 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றம் செய்யப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தற்போது தெரிவித்துள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும், காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''அரசுக்கு சொந்தமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் 50 சதவீத வாகனங்களை, எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு மாற்றி விடுவோம்'' என்றார். கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், ஐடி பார்க்குகள், அப்பார்மெண்ட்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிகளவில் இல்லாத காரணத்தால்தான், பெட்ரோல், டீசல் வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
பெங்களூர் மற்றும் மைசூர் இடையே உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் கட்டமைக்கப்படும். எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாப்பானவை. அவற்றை இயக்குவதற்கும் குறைந்த செலவுதான் ஆகும்'' என்றார்.
இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக விளங்கும் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இதுபோல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் இன்னும் பல்வேறு மாநிலங்களும் வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு முயற்சி செய்து வருகின்றன.
டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, தெலங்கானா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். மத்திய அரசும் தன் பங்கிற்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மட்டுமல்லாது, பெட்ரோல், டீசல் விலை உயர்வும் மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி உந்தி தள்ளி வருகிறது. ஆனால் கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் குறிப்பிட்டதை போல், சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாகனங்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுகிறது.
இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை. எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை உயர்த்துவதற்காக, எம்ஜி மோட்டார் போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன் வசதியை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.