Just In
- 26 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 43 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 2 hrs ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
Don't Miss!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்பை 'கை' விட தயாராகும் பிரபல நிறுவனம்... என்ன சொல்றீங்க! உறைந்து நிற்கும் மக்கள்!
பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் விரைவில் உள் எரிப்பு (பெட்ரோல், டீசல்) வாகனங்கள் தயாரிப்பை கை விட இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
சொகுசு கார் உற்பத்தியாளரான ஆடி மிக விரைவில் அதன் முதல் மின்சார காரான இ-ட்ரான் எஸ்யூவி-யை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காரை ஏற்கனவே உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்கு வழங்கி வரும்நிலையில், இப்போதே இதன் இந்திய அறிமுகத்திற்கு நிறுவனம் தயாராகி வருகின்றது.
வரும் ஜூலை 22ம் தேதி அன்றே ஆடி இ-ட்ரான் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களையே பெருமளவில் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது.
அதாவது, 2026ம் ஆண்டில் இருந்து முழு வீச்சில் மின் வாகன தயாரிப்பை கையிலெடுக்க இருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி 2033ம் ஆண்டிற்கு பின்னர் முழு முழுக்க மின் வாகனங்களை மட்டுமே தயாரிக்க இருப்பதாகவும் நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆமாங்க, நீங்க நினைக்கிறது சரிதான். ஆடி நிறுவனம் முழுவதுமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தி கை விட இருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றது.
ஆகையால், நிறுவனத்தின் உள் எரிப்பு எஞ்ஜின் கொண்ட வாகன பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். ஆடி நிறுவனம் மட்டுமில்லைங்க ஏற்கனவே இந்த முடிவை பல முன்னணி நிறுவனங்கள் எடுத்திருக்கின்றன.
எதிர்காலத்தில் முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வருவோம் என அவை தீர்மானம் எடுத்திருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுகாதாரச் சீர்கேடில் அதிக பங்கினை எரிபொருளால் இயங்கும் வாகனங்கள் கொண்டிருக்கின்றன.
இதனால், புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. இதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தங்களின் மின் வாகன கொள்கை பற்றி அறிவிக்கத் தொடங்கியிருக்கின்றன. மேலும், தற்போது ஆடி நிறுவனமும் இத்தகவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பெர்லின் நகரத்தில் நடைபெற்ற ஓர் மாநாட்டில் பங்கேற்ற ஆடி நிறுவனத்தின் சிஇஓ மார்கஸ் டியூஸ்மேன் இத்தகவலை உறுதி செய்தார்.
இதுகுறித்த அவர் கூறியதாவது, "ஆடி ஏற்கனவே இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரின் வாயிலாக மின்சார உலகில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஏ6 அடிப்படையிலான இன்னுமொரு மின்சார காரும் தயாரிப்பில் இருக்கின்றது. இதைத்தொடர்ந்து இன்னும் பல தயாரிப்புகளை மின்சார வெர்ஷனில் உருவாக்க முதலீடுகளைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது" என எதிர்கால தயாரிப்புகள்குறித்து அவர் தெரிவித்தார்.
2025ம் ஆண்டிற்குள் 20 புதிய மின்சார கார்களை வெளியிட நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். ஆகையால், சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி எரிபொருளால் இயங்கும் வாகன தயாரிப்பை கைவிட இருப்பது இப்போதே உறுதியாகியுள்ளது.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி