சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி! பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் குழப்பம்! எதற்காக தெரியுமா?

சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் சொகுசு கார் உற்பத்தியாளரான பென்ட்லீ கூட்டணை வைத்திருக்கின்றது. இந்த கூட்டணி எதற்காக என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி! பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் குழப்பம்! எதற்காக தெரியுமா?

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பென்ட்லீ, மசல்லன் எனும் உலக புகழ்பெற்ற விஸ்கி மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி! பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் குழப்பம்! எதற்காக தெரியுமா?

இதுவரை, வாகன உற்பத்தி நிறுவனங்கள் உடை, கடிகாரம் மற்றும் மின்சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுடன் மட்டுமே கூட்டணியை வைத்து வந்தநிலையில், பென்ட்லீ நிறுவனம் தனித்துவமாக மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியுள்ளது.

சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி! பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் குழப்பம்! எதற்காக தெரியுமா?

தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பல புதிய தயாரிப்புகளை வழங்கும் நோக்கிலேயே இந்த கூட்டணி தொடங்கப்பட்டிருப்பதாக பென்ட்லீ தெரிவித்துள்ளது. குறிப்பாக, புதிய தயாரிப்புகள் அதிக லக்சூரி மற்றும் சூப்பர் வசதியை நோக்கில் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி! பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் குழப்பம்! எதற்காக தெரியுமா?

ஆகையால், இரு நிறுவனங்களும் காருக்குள் இருக்கும் சொகுசு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இணைந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. பென்ட்லீ நிறுவனத்தின் பெயான்ட் 100 கொள்கையின்கீழ் தனது தயாரிப்புகளை அதிக சொகுசு வாகன மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி! பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் குழப்பம்! எதற்காக தெரியுமா?

இதனடிப்படையிலேயே மசல்லன் நிறுவனத்துடன் பென்ட்லீ இணைந்திருக்கின்றது. அதேசமயம், சொகுசு உற்பத்தியாளர் அதன் தயாரிப்புகள் அனைத்தையும் மின் வாகனமாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியிருப்பதும் இங்கு கவனித்தகுந்தது. நிறுவனம் 2023ம் ஆண்டில் இருந்து இப்பணியில் முழுமையாக களமிறங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி! பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் குழப்பம்! எதற்காக தெரியுமா?

மேலும், இந்த முயற்சியின் அடிப்படையில் தனது முதல் மின்சார வாகனத்தை நிறுவனம் 2025ம் ஆண்டில் விற்பனைக்கு களமிறக்கும் என தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தனது ஒட்டுமொத்த தயாரிப்புகளையும் 2030ம் ஆண்டிற்குள் மின்சார வாகனமாக மாற்ற இருப்பதாகவும் கூறியுள்ளது.

சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி! பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் குழப்பம்! எதற்காக தெரியுமா?

காற்று மாசை குறைக்கும் நோக்கில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பை கைவிட இருப்பதாக அறிவித்த வண்ணம் இருக்கின்றன. முன்னணி நிறுவனங்கள்கூட இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளநிலையில் பென்ட்லீயும் இந்த அறிவிப்பை சமீபத்தில் அறிவித்தது.

சரக்கு தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணி! பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் செயலால் குழப்பம்! எதற்காக தெரியுமா?

இந்த நிலையிலேயே காற்று மாசை அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் உற்பத்தியை கைவிட நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இத்துடன், தனது தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியிலும் நிறுவனம் தற்போது களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Bentley Collaborates With Scottish Whiskey Brand Macallan. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X