Just In
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 4 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அடிக்கடி மழையில் வாகனம் ஓட்டுகிறீர்களா? அப்போ இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!!
அநேகமாக எல்லார் ஊரிலும் குறைந்தது விட்டு விட்டு தூரலாகவாவது மழை பெய்து கொண்டிருக்கும் என நினைக்கிறேன். இதனால் இந்த குளிர்ச்சியான சூழ்நிலைக்கு இதமாக நீண்டத்தூர பயணத்தை பலர் துவங்கி இருப்பீர்கள்.
சில பேர் இப்போதுதான் துவங்க திட்டமிட்டு வருவீர்கள். ஆனால் உண்மையில் வழக்கமான நாட்களில் சாலையில் வாகனத்தை ஓட்டுவதை காட்டிலும் மழை நேரங்களில் ஓட்டுவது சில ஆபத்துகளை உள்ளடக்கியுள்ளது.
எனவே ஈரமான மற்றும் சறுக்கி விடக்கூடிய சாலையில் பயணம் செய்கிறீர்கள் என்றால் நாங்கள் கூறவுள்ள இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். கூறவுள்ள மற்ற எல்லா விஷயத்திற்கும் முன்னதாக, ஈரமான சாலையில், நன்கு ஓட்ட தெரியும் என்றாலும் பரவாயில்லை மெதுவாக செல்ல பாருங்கள் என்பதை முதலில் சொல்லி கொள்கிறோம்.
டயர்களை பராமரித்தல் கட்டாயம்
டயர்கள் தான் ஒரு வாகனத்தின் நுனி வேர். அது சரி இல்லை என்றால் மொத்த வாகனமும் ஆட்டம் கண்டுவிடும். அதிலும் மழை காலம் என்றால் சொல்லவே வேண்டாம். சில முறை விபத்துகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு.
எனவே டயர்கள் பழுதாகினாலோ அல்லது பழையதாகினாலோ அவற்றை உடனுக்கு உடன் மாற்றிவிடுங்கள். மழை காலம் உங்கள் பகுதியில் துவங்கிவிட்டது என்றால், வாகனத்தின் டயர்களை ஒருமுறை மாற்றிவிடுங்கள்.
ப்ரேக்குகளை சரிப்பார்க்க வேண்டும்
மழைக்காலங்களில் ப்ரேக்குகள் அவ்வளவு திறனுள்ளவைகளாக செயல்படாது. இதனால் தான் மழை பெய்யும் நேரங்களில் வேகமாக வாகனத்தை ஓட்டாதீர்கள் என சொல்கிறோம்.
ஏனெனில் அத்தகைய நேரங்களில் உங்களது வாகனத்தின் ப்ரேக்கே உங்களுக்கு எமனாக மாறிவிடலாம். ப்ரேக் அமைப்பு சமீபத்தில் தான் புதியதாக பொருத்தப்பட்டது என்றாலும், திடீர் ப்ரேக்குகளை தவிர்க்க பாருங்கள்.
மழையில் நனைந்தபடி வாகனம் ஓட்ட வேண்டாம்
மோட்டார்சைக்கிள்களில் செல்கிறீர்கள் என்றால் திடீரென மழை வந்தால் அருகில் உள்ள கடைகளிலோ அல்லது வீடுகளின் அருகிலோ நின்று கொள்ளுங்கள். ஏனென்றால் மழையில் நனைந்தப்படி பைக் ஓட்டும்போது சாலை அவ்வளவு தெளிவாக தெரியாது.
இது விபத்தில் சென்று முடியலாம். காரில் செல்கிறீர்கள் என்றால், மழையில் முழுவதுமாக நனைய நேர்ந்தால் முழுவதும் உலர்ந்த பின்பு காருக்குள் நுழைய பாருங்கள். இல்லையென்றால் இருக்கைகளிலும், முதுகு தலையணை பகுதியிலும் உலர்ந்த துணி ஒன்றை வைத்த பின்பு அதன் மீது அமருங்கள்.
நனைந்தப்படியே அமர்ந்தால் சில நாட்கள் கழித்து கேபினில் கெட்ட வாடை அடிக்க ஆரம்பிக்கும். இதில் இருந்து விடுப்படுவது அவ்வளவு சுலபம் அல்ல. பிறகு உங்களுக்கு காரை எடுத்து செல்லவே பிடிக்காது. இல்லையென்றால் கார் வாஷிற்கு விட வேண்டியதாகி விடும்.
சர்வீஸ் செய்துக்கொள்ளலாம்
மழை காலம் துவங்கிவிட்டது என்றால், ஒருமுறை உங்களது வாகனத்தை சர்வீஸ் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் மழை காலத்தில் பல்வேறு விதமான பழுதுகள் வாகனத்தில் ஏற்பட வாய்ப்புண்டு. ஏற்கனவே சிறிய பிரச்சனையாக இருந்திருந்தால், அது பெரிய பிரச்சனையாக ப்ரேக் டவுண் வரையில் கொண்டு செல்லலாம்.
எனவே உங்களுக்கே தெரியாமல் உங்களது வாகனத்தில் இருக்கும் பிரச்சனைகளை சர்வீஸ் செய்வதன் மூலம் களைய செய்வது நல்லது. இல்லையென்றால் வெளுத்து வாங்கும் மழையின் போது காரை நகர்த்த முடியாமல் சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
கார் வாஷ் செய்வது அவசியம்
மழை காலத்தில் ஏன் கார் வாஷ் செய்ய வேண்டும், அதான் மழை பெய்கிறதே என பலர் அசால்ட்டாக இருப்பீர்கள். ஆனால் உண்மையில் மற்ற நேரங்களை காட்டிலும் மழை காலத்தின் போது தான் காரை அவ்வப்போது கார் வாஷிற்கு விட வேண்டும் என்கின்றனர் மெக்கானிக்குகள்.
ஏனெனில் மற்ற சமயங்களில் சாலையின் புழுதி, தூசி மட்டுமே காரின் அடிப்பகுதியில் படும். இதனால் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படாது. ஆனால் சேறு, சகதிகளை கடக்கும்போது அவை காரின் அடிப்பகுதியில் படியலாம். மழைநீர் தேங்கலாம். இதனால் காரின் அடியில் சில பகுதிகளில் துருப்பிடித்தல் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
மழைக்காலத்தில் டிரைவிங் செய்யும்போது நினைவில் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் கூறிவிட்டோம் என்று நினைக்கிறேன். குறைந்தப்பட்சம் மழை காலத்தில் வேகமாக வாகனத்தை ஓட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவும்.
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்