Just In
- 4 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 4 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 5 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 7 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தரமான அறிவிப்பு... சுகாதார பணியாளர்களுக்கு தரமான ஆஃபரை அறிவித்த பிரபல கால் டாக்சி நிறுவனம்...
கொரோனா வைரஸ் முன்களப் பணியாளர்களான சுகாதார பணியாளர்களுக்கு பெருமிதம் சேர்க்கும் விதமாக சிறப்பு ஆஃபரை பிரபல கால் டாக்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
கொரோனா வைரசின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. முதல் அலையைக் காட்டிலும் தற்போதைய இரண்டாம் அலையில் பாதிப்புகள் மிக மிக அதிகமாக உள்ளன. குறிப்பாக, வைரஸ் பாதிப்பைக் காட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியா மிகக் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றது.
இந்த மாதிரியான சூழ்நிலையில் மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் போன்ற பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டக் குறைப்பதற்காக பெரும் உதவிகளை வழங்கத் தொடங்கியிருக்கின்றது. மிக சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் ஆக்சிஜன் ஆன் வீல்ஸ் எனும் சிறப்பு ஆக்சிஜன் டூர் டெலிவரி சேவையை மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கியது.
இவ்வாறு, நாடு இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வரும் வேலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில தங்களின் உதவி கரத்தை நீட்டி உதவியை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், பிரபல வாடகை கார் நிறுவனமான ப்ளூஸ்மார்ட் (BluSmart) சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பு சேவையை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி, தன்னுடையே சேவையைப் பயன்படுத்தும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்க இருப்பதா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்கள பணியாளர்களான சுதார ஊழியர்களுக்கு ப்ளூஸ்மார்ட் இச்சலுகையை அறிவித்திருப்பது வரவேற்கதக்கதாக அமைந்துள்ளது.
மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பாராமெடிக்கல் துறையைச் சார்ந்தவர்கள், அவசரகால உதவியாளர்கள், ஆகியோர் சுகாதாரப் பணியாளர்கள் ஆவார். இவர்களுக்கே 50 கட்டண சலுகை சிறப்பு சேவையை ப்ளூஸ்மார்ட் தொடங்கியுள்ளது.
குருகிராம் நகரத்தை மையமாகக் கொண்டு ப்ளூஸ்மார்ட் தற்போது டெல்லி மற்றும் தேசிய தலைநகரத்தில் மட்டுமே சேவையை மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம் பயன்படுத்தும் பெரும்பாலான வாடகை வாகனங்கள் மின்சார வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் மின்சார வாகனங்களை தனது சேவையில் ஈடுபடுத்தி வருகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நிறுவனமே தற்போது கோவிட்-19 முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதி சலுகை கட்டண சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ப்ளூஸ்மார்ட் நிறுவனத்தைப் போல் இன்னும் சில நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சேவைகளை சுகாதாரப் பணியாளர்களுக்கென தனித்துவமாக வழங்கி வருகின்றன. அதாவது, இலவச பிக் மற்றும் ட்ராப் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..