Just In
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 4 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்
கொரோனா லாக்டவுன் காரணமாக டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கார் உற்பத்தியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றமான சூழல் நிலவுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக வாகன உற்பத்தி அடியோடு முடங்கியது. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்களும், அதனை சார்ந்த துணை வர்த்தக நிறுவனங்களும் பெரிய நஷ்டத்தை சந்தித்தன.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்த ஆட்டோமொபைல் துறை தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பெரிய பாதிப்பை சந்திக்கத் துவங்கி இருக்கிறது.
நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா இருந்து வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அங்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் மஹிந்திரா வாகன ஆலைகளில் குறைந்த பணியாளர்களுடன் உற்பத்தி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் ஆலைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களின் கார்களின் உற்பத்தி பலத்த பாதிப்பை சந்திக்கத் துவங்கி இருக்கிறது.
மேலும், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்களுக்கான வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. இதனால், ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள் குறித்த நேரத்தில் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, புதிதாக புக்கிங் செய்ய செல்வோருக்கும் அதிக வெயிட்டிங் பீரியட் குறித்த தகவலால் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கொரோனா லாக்டவுன் மட்டுமின்றி, செமி கன்டக்டர் எனப்படும் கார்களில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய மின்னணு சாதனத்திற்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதுவும் கார் உற்பத்தியில் பின்னடவை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு பக்கம் புதிய கார்களுக்கான தேவை சிறப்பாக இருந்தும் குறித்த நேரத்தில் உற்பத்தி செய்து கொடுக்க முடியாத நிலையில் கார் நிறுவனங்கள் தவித்து வருகின்றன. மேலும், வர்த்தகத்திலும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.