Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 5 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனா லாக்டவுன்... டாடா, மஹிந்திரா கார் உற்பத்தியில் பாதிப்பு... வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கும் அபாயம்
கொரோனா லாக்டவுன் காரணமாக டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கார் உற்பத்தியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றமான சூழல் நிலவுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக வாகன உற்பத்தி அடியோடு முடங்கியது. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்களும், அதனை சார்ந்த துணை வர்த்தக நிறுவனங்களும் பெரிய நஷ்டத்தை சந்தித்தன.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்த ஆட்டோமொபைல் துறை தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பெரிய பாதிப்பை சந்திக்கத் துவங்கி இருக்கிறது.
நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா இருந்து வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அங்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் மஹிந்திரா வாகன ஆலைகளில் குறைந்த பணியாளர்களுடன் உற்பத்தி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் ஆலைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களின் கார்களின் உற்பத்தி பலத்த பாதிப்பை சந்திக்கத் துவங்கி இருக்கிறது.
மேலும், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்களுக்கான வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. இதனால், ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள் குறித்த நேரத்தில் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, புதிதாக புக்கிங் செய்ய செல்வோருக்கும் அதிக வெயிட்டிங் பீரியட் குறித்த தகவலால் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கொரோனா லாக்டவுன் மட்டுமின்றி, செமி கன்டக்டர் எனப்படும் கார்களில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய மின்னணு சாதனத்திற்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதுவும் கார் உற்பத்தியில் பின்னடவை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு பக்கம் புதிய கார்களுக்கான தேவை சிறப்பாக இருந்தும் குறித்த நேரத்தில் உற்பத்தி செய்து கொடுக்க முடியாத நிலையில் கார் நிறுவனங்கள் தவித்து வருகின்றன. மேலும், வர்த்தகத்திலும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!