Just In
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 4 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
காரின்மீது படுத்து சென்ற இளைஞர்கள்... தேடும் காவல்துறை... இப்படி பண்ணாதீங்கனு சொன்ன எங்க கேக்குறாங்க...
காரின் மீது படுத்தும், ஜன்னல் வழியாக அமர்ந்தும் பயணித்த இளைஞர்கலை காவல்துறையினர் தேடி வருவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு விதிமீறல்வாதிகள்மீது காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இருப்பினும், போதை ஆசாமிகள், வாகன ஸ்டண்ட் பிரியர்கள் இதைக் கைவிட்டதாகத் தெரியவில்லை.
அந்தவகையில், வாகன ஸ்டண்டில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரையே தாங்கள் தேடி வருவதாக மஹாராஷ்டிரா காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் சிலர் காருக்குள் அமராமல், அதன் மீது ஏறியவாறு பயணித்ததுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவின் அடிப்படையிலேயே அனைத்து இளைஞர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயாராகியிருக்கின்றனர். சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் உல்ஹஸ்நகர், கல்யாண் மலங்கட் பகுதியில் உள்ள ஹில் லைன் காவல்நிலைய அதிகாரிகளே இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
இனியும் இதுபோன்ற விதிமீறல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்த ஸ்டண்ட் விவகாரத்தில் சற்று அதி-தீவிரத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகன போக்குவரத்து விதிகளின்படி பொதுவெளியில் இதுபோன்று வாகன ஸ்டண்டில் ஈடுபடுவது குற்ற செயலாகும்.
இதனை மீறும் வகையிலேயே இளைஞர்களின் செயல் அமைந்திருக்கின்றது. ஆகையால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, அவர்கள் பயணித்த மாருதி எஸ் க்ராஸ் காரையும் பறிமுதல் செய்ய தயாராகி இருப்பதாக காவல்துறையில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. காரின் பதிவெண் மங்கலாக தெரிவதால் அவர்களை கண்டுபிடிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த காரின் முகப்பு பகுதியிலேயே ஓர் இளைஞர் படுத்தும், ஜன்னல்களில் சிலர் அமர்ந்தும் பயணித்திருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவே இணையத்தில் வைரலாகி தற்போது இளைஞர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது.
சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் சிலர் இதுபோன்ற விநோத செயல்களில் ஈடுபடுவதும், அவர்கள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கையானதாக மாறி வருகின்றது. கேரளாவில் இதுபோன்ற பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
சிசிடிவி, சக வாகன ஓட்டிகள் புகார் ஆகியவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் விதிமீறல் வாதிகளின்மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையிலேயே மஹாராஷ்டிரா காவல்துறை விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த விதிமீறல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியிருக்கின்றது.
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு