Just In
- 1 hr ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 3 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 6 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வழி தவறி வந்த பிரபல நடிகர்! உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா? இத எதிர்பார்க்கவே இல்ல!
இந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் கார்த்திக் ஆர்யன் வழி தவறி சென்று காவலர்களிடத்தில் உதவி கேட்டதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அப்போது நடந்த சுவாரஷ்ய நிகழ்வுகுறித்த தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்தி திரையுலகைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் கார்த்திக் ஆர்யன். பயோடெக்னாலஜி இன்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் மாடலிங் பின்னர் நடிப்பு தனது ரோலை மாற்றிக் கொண்டார். இவர் அண்மையில் வாகன உலகின் செய்தியின் தலையங்கத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உலகளவில் லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் எஸ்யூவி சொகுசுக்கு காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. சொகுசு வசதியும், அதிக திறனை வெளிப்படுத்துவதிலும் மிக சிறந்த எஸ்யூவி காராக உருஸ் இருக்கின்றது. ஆகையால், இக்காருக்கு தொழிலதிபர்கள், நடிகர்கள் என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.
எனவே, இந்தியாவில் இக்காரை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை தென்படுகின்றது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு (காத்திருப்பு காலத்தை) கூடுதல் பணத்தைச் செலுத்தி தனக்கான லம்போர்கினி எஸ்யூவி காரை நடிகர் கார்த்திக் ஆர்யன் பிரத்யேகமாக பெற்றார். அதிக திறன் கொண்ட எஸ்யூவி காரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் தனது கைகளில் பெற்றார். இதன் விளைவாகவே அவர் வாகன செய்தி உலகின் தலையங்கமாக அண்மையில் மாறினார்.
இந்த காரிலேயே மஹாரஷ்டிரா மாநிலம், பஞ்சகனி பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பிற்கு நடிகர் கார்த்திக் ஆர்யன் சென்றிருக்கின்றார். அப்போது அவர், அவர் செல்ல வேண்டிய பாதையை தவற விட்டுவிட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த நேரத்தில் வழியில் இருந்த காவலர்களிடத்தில் நடிகர் உதவி கோரியிருக்கின்றார்.
அப்போதே யாரும் எதிர்பார்த்திராத ஓர் சம்பவம் அரங்கேறியது. ஆம், போலீஸார்கள் உதவி கேட்ட நடிகருக்கு பாதைக் குறித்த தகவலை வழங்குவதற்கு முன்னர் செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். மேலும், அவருடன் காவலர்கள் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.
இதன் பின்னரே நடிகருக்கான பாதையை காவலர்கள் கூறியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிகழ்வை ஒட்டுமொத்தமாக தனது உதவியாளர் ஒருவர் வாயிலாக காட்சிப்பதிவு செய்த நடிகர் கார்த்திக் ஆர்யன் அதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போலீஸாரிடத்தில் உதவி கோரும் இவ்வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கார்த்திக் ஆர்யன் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி சொகுசு காரை வாங்குவதற்காக ரூ. 50 லட்சம் வரை கூடுதல் பணத்தைச் ச செலவழித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கார் ஏற்கனவே ரூ. 3.5 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இத்தகைய ஓர் சொகுசு காருக்கே கூடுதல் தொகையை செலுத்தி அவர் பெற்றிருக்கின்றார்.
லம்போர்கினி நிறுவனத்தின் மிகவும் வேகமாக விற்பனையாகும் சொகுசு காராக உருஸ் எஸ்யூவி இருக்கின்றது. இந்தியாவில் நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பல தரப்பினரிடம் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்தியாவில் அண்மையில் 300 யூனிட் விற்பனை என்ற சாதனையை நிறுவனம் செய்தது.
இதுவரை எந்தவொரு சொகுசு கார் உற்பத்தியாளரும் செய்யாத சாதனையாக இது பார்க்கப்படுகின்றது. உலகின் மிகவும் வேகமான எஸ்யூவி காராக உருஸ் காட்சியளிக்கின்றது. இக்காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
இந்த எஞ்ஜின் உச்சபட்சமாக மணிக்கு 305 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் என்பது உருஸ் எஸ்யூவியின் கூடுதல் சிறப்பு. இதேபோல், 12.8 செகண்டுகளுக்கு உள்ளாக பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.
கார்த்திக் ஆர்யன் இடத்தில் ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. பிஎம்டபிள்யூ 5 செரீஸ் மற்றும் மினி கூப்பர் போன்ற லக்சூரி கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுதவிர ராயல் என்பீல்டு பைக்கையும் அவர் பயன்பாட்டில் வைத்திருக்கின்றார். இதில், மினி கூப்பர் காரை கார்த்திக் ஆர்யன் அவரது அம்மாவிடம் இருந்து பரிசாக பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!