Just In
- 35 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 41 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வழி தவறி வந்த பிரபல நடிகர்! உதவி கேட்டவரிடம் பதிலுக்கு போலீஸ் என்ன கேட்டாங்க தெரியுமா? இத எதிர்பார்க்கவே இல்ல!
இந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் கார்த்திக் ஆர்யன் வழி தவறி சென்று காவலர்களிடத்தில் உதவி கேட்டதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அப்போது நடந்த சுவாரஷ்ய நிகழ்வுகுறித்த தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
இந்தி திரையுலகைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் கார்த்திக் ஆர்யன். பயோடெக்னாலஜி இன்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் மாடலிங் பின்னர் நடிப்பு தனது ரோலை மாற்றிக் கொண்டார். இவர் அண்மையில் வாகன உலகின் செய்தியின் தலையங்கத்தில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உலகளவில் லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் எஸ்யூவி சொகுசுக்கு காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. சொகுசு வசதியும், அதிக திறனை வெளிப்படுத்துவதிலும் மிக சிறந்த எஸ்யூவி காராக உருஸ் இருக்கின்றது. ஆகையால், இக்காருக்கு தொழிலதிபர்கள், நடிகர்கள் என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.
எனவே, இந்தியாவில் இக்காரை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை தென்படுகின்றது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு (காத்திருப்பு காலத்தை) கூடுதல் பணத்தைச் செலுத்தி தனக்கான லம்போர்கினி எஸ்யூவி காரை நடிகர் கார்த்திக் ஆர்யன் பிரத்யேகமாக பெற்றார். அதிக திறன் கொண்ட எஸ்யூவி காரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் தனது கைகளில் பெற்றார். இதன் விளைவாகவே அவர் வாகன செய்தி உலகின் தலையங்கமாக அண்மையில் மாறினார்.
இந்த காரிலேயே மஹாரஷ்டிரா மாநிலம், பஞ்சகனி பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பிற்கு நடிகர் கார்த்திக் ஆர்யன் சென்றிருக்கின்றார். அப்போது அவர், அவர் செல்ல வேண்டிய பாதையை தவற விட்டுவிட்டதாகக் கூறப்படுகின்றது. அந்த நேரத்தில் வழியில் இருந்த காவலர்களிடத்தில் நடிகர் உதவி கோரியிருக்கின்றார்.
அப்போதே யாரும் எதிர்பார்த்திராத ஓர் சம்பவம் அரங்கேறியது. ஆம், போலீஸார்கள் உதவி கேட்ட நடிகருக்கு பாதைக் குறித்த தகவலை வழங்குவதற்கு முன்னர் செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். மேலும், அவருடன் காவலர்கள் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.
இதன் பின்னரே நடிகருக்கான பாதையை காவலர்கள் கூறியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிகழ்வை ஒட்டுமொத்தமாக தனது உதவியாளர் ஒருவர் வாயிலாக காட்சிப்பதிவு செய்த நடிகர் கார்த்திக் ஆர்யன் அதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போலீஸாரிடத்தில் உதவி கோரும் இவ்வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கார்த்திக் ஆர்யன் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி சொகுசு காரை வாங்குவதற்காக ரூ. 50 லட்சம் வரை கூடுதல் பணத்தைச் ச செலவழித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கார் ஏற்கனவே ரூ. 3.5 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இத்தகைய ஓர் சொகுசு காருக்கே கூடுதல் தொகையை செலுத்தி அவர் பெற்றிருக்கின்றார்.
லம்போர்கினி நிறுவனத்தின் மிகவும் வேகமாக விற்பனையாகும் சொகுசு காராக உருஸ் எஸ்யூவி இருக்கின்றது. இந்தியாவில் நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பல தரப்பினரிடம் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்தியாவில் அண்மையில் 300 யூனிட் விற்பனை என்ற சாதனையை நிறுவனம் செய்தது.
இதுவரை எந்தவொரு சொகுசு கார் உற்பத்தியாளரும் செய்யாத சாதனையாக இது பார்க்கப்படுகின்றது. உலகின் மிகவும் வேகமான எஸ்யூவி காராக உருஸ் காட்சியளிக்கின்றது. இக்காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
இந்த எஞ்ஜின் உச்சபட்சமாக மணிக்கு 305 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் என்பது உருஸ் எஸ்யூவியின் கூடுதல் சிறப்பு. இதேபோல், 12.8 செகண்டுகளுக்கு உள்ளாக பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.
கார்த்திக் ஆர்யன் இடத்தில் ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. பிஎம்டபிள்யூ 5 செரீஸ் மற்றும் மினி கூப்பர் போன்ற லக்சூரி கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுதவிர ராயல் என்பீல்டு பைக்கையும் அவர் பயன்பாட்டில் வைத்திருக்கின்றார். இதில், மினி கூப்பர் காரை கார்த்திக் ஆர்யன் அவரது அம்மாவிடம் இருந்து பரிசாக பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!